மருத்துவ உதவி: கருணாநிதிக்கு மதானி நன்றி ஜூலை

Subscribe to Oneindia Tamil

கோவை:

தனக்குத் தேவைப்படும் மருத்துவ வசதியை தந்து உதவியதற்காக தமிழக முதல்வர்கருணாநிதிக்கும், இதற்காக கருணாநிதியிடம் பேசிய கேரள முதல்வர்அச்சுதானந்தனுக்கும், கோவை குண்டுவெடிப்பு கைதியான அப்துல் நாசர் மதானிநன்றி தெரிவித்துள்ளார்.

கேரளா மக்கள் கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி கோவை குண்டுவெடிப்புவழக்கில் சிக்கி கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பல்வேறு உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வரும் அவருக்கு உரிய மருத்துவசிகிச்சை அளிக்க உதவ வேண்டும் என்று சமீபத்தில் சென்னைக்கு வந்த கேரளமுதல்வர் அச்சுதானந்தன், கருணாநிதியிடம் கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து பரிசீலிக்கப்படும் என கருணாநிதி உறுதியளித்தார். இதைத் தொடர்ந்துசென்னையிலிருந்து மருத்துவர் குழு கோவை சிறைக்கு வந்து மதானியைபரிசோதித்தது. அதன் பின்னர் சிறையிலேயே மதானிக்கு ஆயுர்வேத சிகிச்சைஅளிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டது.

அதன்படி தற்போது மதானிக்கு ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில், தனது வழக்கறிஞர் மூலமாக மருத்துவ சிகிச்சைக்கு உதவியதற்காககருணாநிதிக்கும், இதற்காக கருணாநிதியிடம் பேசிய அச்சுதானந்தனுக்கும் நன்றிதெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார் மதானி.

அதேபோல தனக்கு சிகிச்சை அளித்து வரும் ஆர்ய வைத்ய பார்மஸி நிறுவனத்திற்கும்அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+