நடிகை நிர்மலாவுக்கு முன் ஜாமீன்
சென்னை:
சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பி.டி.மனோகரனின் மருமகள்மதுதேவி தற்கொலை வழக்கில் மனோகரன், டிவி நடிகை நிர்மலா உள்ளிட்ட 4பேருக்கும் சென்னை உயர்நீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது.
![]() |
மேலும், மதுதேவியின் சகோதரரும், வரதட்சணை கொடுமை, டிவி நடிகையால்ஏற்பட்ட தொல்லைகள் ஆகியவைதான் தனது தங்கையின் தற்கொலைக்குக் காரணம்என போலீஸில் புகார் கொடுத்தார். இதையடுத்து மதுதேவியின் கணவர் நவீன் குமார்கைது செய்யப்பட்டார்.
மனோகரன், அவரது மனைவி கனகவல்லி, மகள் உமா, டிவி நடிகை நர்மலாஆகியோர் தலைமறைவாகி விட்டனர். இந்த நிலையில் நான்கு பேரும் முன்ஜாமீன்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி பாஷா முன்னிலையில் ஆஜரான மதுதேவியின் சகோதரர்கணேஷ்பாபுவின் வழக்கறிஞர், வரதட்தணை கொடுமைப்படுத்தியே மதுதேவியைசித்திரவதை செய்துள்ளனர். மேலும் நடிகை நிர்மலா மிகப் பெரிய அளவில்மதுதேவியை இழிவுபடுத்தியுள்ளார். எனவே நான்கு பேருக்கும் முன் ஜாமீன் தரக்கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்தார்.
அரசுத் தரப்பு வழக்கறிஞர் இளங்கோவும் முன் ஜாமீன் தர எதிர்ப்புத் தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பாஷா, மதுதேவியின் கணவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே மற்றவர்களை கைதுசெய்வது தேவையற்றது என்று கூறி நான்கு பேருக்கும் முன் ஜாமீன் வழங்கிஉத்தரவிட்டார்.
இதில் பி.டி.மனோகரன் 2 வாரங்களுக்கு தினமும் போலீஸ் முன் ஆஜராக வேண்டும்.கனகவல்லி, உமா, நடிகை நிர்மலா ஆகியோர் 3 நாட்களுக்கு காவல் நிலையத்தில்ஆஜராக வேண்டும். அதன் பின்னர் போலீஸார் விசாரணைக்குக்கூப்பிடும்போதெல்லாம் வர வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில்தெரிவித்துள்ளார்.













Click it and Unblock the Notifications