டென்ஷனா கேப்டன்-உதவியாளருக்கு பளார்
திருச்சி:
திருச்சியில் நடந்த தீ விபத்து பகுதியைப் பார்வையிடச் சென்ற நடிகர் விஜயகாந்த்,கூட்டத்தைப் பார்த்து டென்ஷன் ஆகி, அவர்களை கட்டுப்படுத்தாமல் தேமே என்றுநின்றிருந்த தனது உதவியாளரை பொதுமக்கள் முன்னிலையில் பளார் பளார் எனஅறைந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
![]() |
இந் நிலையில் நேற்று திருச்சியில் ஒரு இடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பலகுடிசைகள் எரிந்து போயின. இதையடுத்து அந்தப் பகுதிக்குச் சென்று மக்களுக்குஆறுதல் கூறுவதற்காக மாலையில் அங்கு சென்றார் விஜயகாந்த்.
விஜயகாந்த்தைப் பார்த்ததும் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் கூட்டமாக கூடிவிஜயகாந்த்தை முற்றுகையிட்டு தங்களது கவலைகளைத் தெரிவித்தனர்.
பல பெண்கள் கண்ணீர் விட்டு அழுதபடி நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும் என்றுகோரினர். சிலர் விஜயகாந்த்தின் கையைப் பிடித்து இழுத்து அழுது புலம்பினர்.
கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால், விஜயகாந்த் ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆகிவிட்டார்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்தாமல் அமைதியாக நின்று கொண்டிருந்த தனதுஉதவியாளரைப் பார்த்த விஜயகாந்த் கோபத்துடன் அவரை பளார், பளார் எனஅறைந்தார். பின்னர் அடி வாங்கிய உதவியாளர் கோபத்துடன், பொதுமக்களைபோங்கய்யா அந்தப் பக்கம் என்று தள்ளி விட்டார்.
விஜயகாந்த்தும் முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு பார்க்கலாம், பார்க்கலாம்என்று கூறியவாறு அந்த இடத்திலிருந்து அகன்றார்.
போகும்போது கூட உதவியாளரை அவர் விடவில்லை. திட்டியபடியே போனார்.













Click it and Unblock the Notifications