குடியேற்றம்-பிடியை இறுக்கும் மலேசியா
கோலாலம்பூர்:
மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களை வெளியேற்ற அந்நாட்டுஅரசு கடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.
மலேசியாவில் முறையான பாஸ்போர்ட், விசா இல்லாமல் ஆயிரக்கணக்கானோர்குடியேறியுள்ளனர். பல்வேறு வேலைகளில் இவர்கள் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 5லட்சம் பேர் இதுபோல சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியுள்ளதாககணக்கிடப்பட்டுள்ளது.இவர்களை வெளியேற்ற மலேசிய அரசு புதிய நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகஅந்நாட்டின் பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மலேசிய உள்துறை அமைச்சர் ரஸ்தி ஷேக் அகமது கூறுகையில்,
சட்டவிரோதமாக மலேசியாவில் குடியேறியுள்ளவர்கள் அவர்களது நாட்டுக்குத்திருப்பி அனுப்பபடுவர். அதற்குள் முன்பாக அவர்கள் கைது செய்யப்பட்டுமுகாம்களில் அடைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றார்.
சட்டவிரோதமாக குடியேறியுள்ளவர்களைப் பிடிக்கும் பணிக்காக 1 லட்சம் பேர்கொண்ட மக்கள் தொண்டர் படை அமைக்கப்பட்டுள்ளது.
இவர்களும், காவல்துறை மற்றும் குடியேற்றத்துறை அதிகாரிகள் இணைந்துஇவர்களை கண்டுபிடித்துக் கைது செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
கைது செய்யப்படுபவர்களை அடைக்க புதிய முகாம்கள் அமைக்கப்படவுள்ள.சட்டவிரோதமாக மலேசியாவில் புகுந்துள்ளவர்கள் பெரும்பாலும் கட்டுமானம்மற்றும் தோட்டங்களில்தான் வேலை பார்த்து வருகிறார்கள்.
இவர்களில் பலர் பல்வேறு குற்றச் செயல்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
கடந்த 2005ம் ஆண்டு முதல் இதுவரை 4 லட்சம் பேர் அவர்களது நாடுகளுக்குதிருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். அவர்களில பெரும்பாலானவர்கள் இந்தோனேசியநாட்டைச் சேர்ந்தவர்கள். முறைகேடாகக் குடியேறிய மேலும் 5 லட்சம் பேர்மலேசியாவிலேயே உள்ளனர்.
முறையான வேலை அனுமதியுடன், கிட்டத்தட்ட 10.8 லட்சம் பேர் மலேசியாவில்வேலை பார்த்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications