நெடுமாறன் மீதான பொடா வழக்கு வாபஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறனை விடுவித்து பொடா மறுஆய்வுக்குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து கடந்த அதிமுக அரசு தாக்கல் செய்திருந்தமேல் முறையீட்டு மனுவை தமிழக அரசு வாபஸ் பெற்றது.

பழ.நெடுமாறன், சுபரவீரபாண்டியன், தாயப்பன், ஷாகுல் ஹமீது ஆகியோர் மீதுகடந்த 2002ம் ஆண்டு பொடா வழக்கு தொடரப்பட்டு அவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதற்காக நான்குபேரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் நான்கு பேரும் ஜாமீனில் விடுதலையாகி வந்தனர். இவர்கள் மீதான பொடாவழக்கை பரிசீலனை செய்த பொடா மறு ஆய்வுக் குழு, கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல்15ம் தேதி, நான்கு பேரையும் விடுதலை செய்யலாம் என உத்தரவிட்டது.

இதை எதிர்த்து அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில்,சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது தமிழகஅரசு.

இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ரவிராஜபாண்டியன், முன்பு ஆஜரான அரசு வழக்கறிஞர் ராஜா கலிபுல்லா இந்த மனுவைதமிழக அரசு திரும்பப் பெறுவதாக தெரிவித்து அதற்கான மனுவைத் தாக்கல்செய்தார்.

இதையடுத்து மேல் முறையீட்டு மனுவை நீதிபதி ரவிராஜ பாண்டியன் தள்ளுபடிசெய்தார்.

இதைத் தொடர்ந்து நெடுமாறன் உள்ளிட்டோர் மீதான பொடா வழக்கு முடிவுக்குவந்துள்ளது. இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நெடுமாறன் உள்ளிட்டவர்கள்கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்தனர் என்பதுநினைவிருக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+