பாலத்திலிருந்து கவிழ்ந்த பஸ்-28 போலீசார் காயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
போலீசார் சென்ற பஸ் ரயில் பாலத்தில் இருந்து கீழே கவிழ்ந்தது. அதில் 28 போலீசார் காயமடைந்தனர்.
சென்னை ஆவடியில் உள்ள ஐந்தாவது பட்டாலினைச் சேர்ந்த போலீசார் ஹனுமந்தபுரத்தில் உள்ள துப்பாக்கிச்சுடும் மைதானத்துக்கு பயிற்சிக்காக போலீஸ் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர்.இந்த பஸ் தாம்பரம் அருகே இரும்புலியூர் ரயில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தபோது இன்னொருபஸ்ஸை கடந்து செல்ல டிரைவர் முயன்றார். அப்போது அந்த பஸ் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவரைஉடைத்துக் கொண்டு கீழே கவிழ்ந்தது.
இதில் 8 பெண் போலீசார் உள்பட 28 போலீசார் காயமடைந்தனர். இவர்கள் தாம்பரம் இந்து மிஷன்மருத்துவமனையிலும் சென்னை அரசு பொது மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications