கும்பகோணம் பள்ளி தீவிபத்து: இன்று 2வது நினைவு தினம்

Subscribe to Oneindia Tamil

கும்பகோணம்:

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக் கூடத்தில் தீவிபத்து ஏற்பட்டு94 பச்சிளம் குழந்தைகள் பலியானதன் 2வது ஆண்டு நினைவு தினத்தை இன்றுகும்பகோணம் மக்கள் கண்ணீர் மல்க நினைவு கூர்ந்து வருகின்றனர்.

கும்பகோணத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளிக் கூடத்தில் கடந்த 2004ம் ஆண்டுஜூலை மாதம் 16ம் தேதி ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள்பரிதாபமாக இறந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 2ஆண்டுகள் முடிந்துள்ளது.இதையொட்டி சம்பவம் நடந்த பள்ளிக் கூடம் முன்பு இன்று குழந்தைகளைப்பறிகொடுத்த பெற்றோரும், கும்பகோணம் மக்களும், அரசியல் கட்சியினர், தன்னார்தொண்டு நிறுவனத்தினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கூடி பலியான பிஞ்சுகளின்படங்களுக்கு மாலை அணிவித்தும், மெழுகுவர்த்தி ஏற்றி வைத்தும் கண்ணீர் மல்கநினைவு கூர்ந்தனர்.

இறந்த குழந்தைகளின் ஆத்மா சாந்தி அடைய சர்வ மத பிராத்தனையும்நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு முதலாமாண்டு நினைவு தினத்தையொட்டி 94குழந்தைகளின் பெற்றோர்களும் ரத்ததானம் செய்தார்கள்.

இந்த ஆண்டு தங்களது கண்களை தானம் செய்தனர். இதுதொடர்பாக கையெழுத்திட்டசம்மதக் கடிதத்தை மாவட்ட ஆட்சியர் இருதயராஜ்குமாரிடம் அவர்கள் வழங்கினர்.

கும்பகோணம் முழுவதும் பல்வேறு இரங்கல் நிகழ்ச்சிகளுக்கு இன்று ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+