திருவாசகம் பாட முயன்றவர்கள் கைது; சிதம்பரத்தில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சிெதம்பரம்:

டெல்லி இந்தியா கேட் பகுதியில் இன்றும் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பெரும்பீதி ஏற்பட்டது. டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தைப் பாடமுயன்ற தமிழார்வலர்கள், மனித உரிமை அமைப்பினர் உள்ளிட்ட 100 பேரைபோலீஸார் தடுத்துக் கைது செய்தனர். இதனால் சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்தக் கோவில்தீக்ஷிதர்கள் எனப்படுவோரின் கட்டுப்பாட்டில் உள்ளது. சிதம்பரம் கோவில்தீக்ஷிதர்கள் மீது பல்வேறு சர்ச்சைகள் நிலவுகின்றன.

இந்த நிலையில் மாணிக்கவாசகர் அருளிய திருவாசகத்தை சிதம்பரம் நடராஜர்கோவிலில் பாட ஆறுமுகச்சாமி புலவர் என்ற ஒதுவார் தீர்மானித்தார். ஆனால் இதைஅனுமதிக்க மாட்டோம் என தீக்ஷிதர்கள் தெரிவித்தனர்.

மேலும் சிதம்பரம் நீதிமன்றத்தில் இதுதொடர்பாக தடை உத்தரவும் வாங்கினர். இந்தநிலையில், ஆறுமுகச்சாமி என்ற புலவர் மற்றும் பல தமிழார்வலர்கள் சனிக்கிழமைகோவிலுக்குள் நுழைந்து திருவாசகத்தைப் பாடப் போவதாக அறிவித்தனர்.

திட்டமிட்டபடி ஆறுமுகச்சாமி தலைமையில் நூற்றுக்கணக்கானவர்கள் கோவிலுக்குசெல்ல கிளம்பினர். ஆனால் அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.போலீஸார் நடுச் சாலையிலேயே தடுத்து விட்டதால், சாலையில் நின்றபடியேஆறுமுகச்சாமி திருவாசகத்தை பாடினார்.

தீக்ஷிதர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக சிதம்பரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+