மும்பையின் கோடீஸ்வர பிச்சைக்காரர்கள்!
மும்பை:
மும்பையில் உள்ள பிச்சைக்காரர்களின் ஆண்டு வருமானம் என்ன தெரியுமா? அதிகம்இல்லை, ரூ. 180 கோடி தான்!
இந்தத் தகவலை மகாராஷ்டிர மாநில சமூக நீதித்துறை அமைச்சர் தர்மராவ் பாபாஆத்மாராவ் சட்டமேலவையில் தெரிவித்துள்ளார்.மும்பை நகரில் பிச்சைக்காரர்களின் தொல்லை குறித்த கேள்விக்கு அவர்பதிலளிக்கையில், கடந்த 1971ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மும்பைநகரில் 55,000 பிச்சைக்காரர்கள் இருந்தது தெரிய வந்தது.
அதன் பின்னர் கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இந்த எண்ணிக்கை இப்போதுநிச்சயம் அதிகரித்திருக்கும். இவர்களைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைஎடுத்து வருகிறது.
பிச்சைக்காரர்களுக்கு வருமான வரி கிடையாது. ஆனால் இவர்கள் ஒரு ஆண்டுக்குசம்பாதிக்கும் பணம் ரூ. 180 கோடி என உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒருநாளைக்கு ஒரு பிச்சைக்காரருக்கு அவரது தட்டில் விழும் பணத்தை வைத்து இந்தமதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இது அதிகமாகவும் கூட இருக்கலாம்.
பிச்சைக்காரர்கள் பலர் சொந்தமாக கார்கள், ஆட்டோக்கள் வைத்துள்ளனர். இவற்றைவாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகின்றனர். பலருக்கு முக்கியமான பகுதிகளில்அடுக்குமாடிக் குடியிருப்புகளும் கூட உள்ளன. வட்டிக்குப் பணமும் கொடுத்துவருகின்றனர்.
இப்படி வசதியாக இருக்கும் அவர்கள் தொடர்ந்து பிச்சை எடுப்பதிலும் ஈடுபட்டுவருகின்றனர். அதில் நல்ல வருமானம் வருவதால் அத்தொழிலை அவர்கள் விடமறுக்கிறார்கள் என்றார்.












Click it and Unblock the Notifications