இலங்கை: ரேடார்களை திரும்ப பெறுக-வைகோ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

இலங்கை ராணுவத்துக்கு வழக்கிய ரேடார் கருவிகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுகபொதுச் செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

பிரதமர் மன்மோகன் சிங்கை டெல்லியில் சந்தித்த அவர் இதற்கான கடிதத்தைக் கொடுத்தார். அதில் அவர்கூறியிருப்பதாவது,

இலங்கை விமானப்படைக்கு ரேடார் கருவிகளை இந்தியா அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அவற்றைஉடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் தமிழர்கள் மீது விமானத் தாக்குதல் நடத்தும் சிங்களஅரசுக்கு இந்தியா உதவி செய்கிறது என்ற குற்றச்சாட்டு வரும்.

இலங்கைக்கு எந்தவிதமான ராணுவ உதவியையும், ஆயுத விற்பனையையும் செய்வது இல்லை என்று 1999ல்அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்திய அரசு எடுத்த முடிவை உறுதியாகவும், உண்மையாகவும் செயல்படுத்தவேண்டும் என அந்தக் கடிதத்தில் வைகோ கூறியுள்ளார்.

மேலும், தமிழகத்தில் கொலை வழக்கில் தொடர்புடைய ஒருவர், சிங்கள அரசின் பிரதிநிதியாக இந்தியாவுக்குவந்து பாதுகாப்பு ஆலோசகரை சந்தித்துப் பேச அனுமதித்திருப்பது குறித்து பிரதமரிடம் வைகோ கண்டனம்தெரிவித்தார். அதுபற்றி விசாரிப்பதாக மன்மோகன் உறுதி அளித்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறைகளில் இருக்கும் முருகன், நளினிதம்பதியின் மகள் அரித்ரா இந்தியா வந்து பெற்றோரைச் சந்திக்கவும், இங்கு கல்வி பயிலவும் இந்திய அரசு விசாஅளிக்க வேண்டும் என்றும் பிரதமரிடம் வைகோ கேட்டுக் கொண்டார். அதுபற்றி கவனிப்பதாக பிரதமர்கூறியதாக மதிமுக வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

பிரதமரைச் சந்தித்த பின் அவரது பாதுகாப்பு ஆலோசகர் எம்கே நாராயணனை சந்தித்த வைகோ இலங்கைநிலவரம் பற்றி பேசினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+