முஸ்லீம் நீதிபதிகள் கணக்கெடுப்பு-பாஜக கண்டனம்
டெல்லி:
முஸ்லீம் நீதிபதிகளைக் கணக்கெடுக்க நியமிக்கப்பட்டுள்ள ரஜிந்தர் சச்சார் கமிட்டியை உடனே ரத்து செய்யவேண்டும் என பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.
அவர் கூறுகையில்,முஸ்லிம்களின் சமூக மற்றும் கல்வி நிலையை அறிந்து கொள்ளும் விதமாக கடந்த ஆண்டு மத்திய அரசு கமிட்டிஅமைத்தது. தற்போது முஸ்லீம் நீதிபதிகள் கணக்கெடுப்பு நடத்த டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிரஜிந்தர் சச்சார் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
இது நாட்டை அழிவுப் பாதைக்கு கொண்டு செல்லும் கமிட்டியாக அமைந்துள்ளது. நீதித் துறையில் மதவாதத்தைபுகுத்தும் முயற்சி இது. மத்திய அரசு தங்கள் நிலையில் பிடிவாதமாக இருப்பதையே இது வெளிப்படுத்துகிறது.இதை பிரதமர் உடனடியாக இந்த கமிட்டிக்கு முடிவு கட்ட வேண்டும்.
மதத்தின் அடிப்படையில் நீதித் துறையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், அது இந்தியாவுக்கு நன்மை பயக்கும்என சச்சார் கமிட்டி நினைக்கிறதா?.
மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய சம்பளக் கமிஷன் அமைக்க பாஜக ஆட்சி நடக்கும் மத்திய பிரதேசம்,குஜராத் அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகக் கூறுவது தவறு. இதனால் ஏற்படும் நிதிச் சுமையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தான் இரு மாநில அரசும் கோரிக்கை விடுத்துள்ளது என்றார் ஜேட்லி.
யாருக்கு இட ஒதுக்கீடு கிடைக்கும்:
இதற்கிடையில் பிற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சலுகைகளை ஜனாதிபதி, உச்ச நீதிமன்றம் மற்றும்உயர்நீதிமன்ற நீதிபதிகள் போன்ற உயர்பதவிகளை வகிப்போர் வாரிசுகள் இனி பெற முடியாது என மத்திய அரசுஅறிவித்துள்ளது.
மேலும் ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சத்துக்கு மேல் வருவாய் உள்ளவர்கள், சொத்துரிமை சட்டத்தின் கீழ் குறிப்பிட்டஅளவுக்கு தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு சொத்துக்கள் வைத்து இருப்பவர்கள் ஆகியோரும் இனி இதரபிற்படுத்தப்பட்டவர்களாகக் கருதப்படமாட்டார்கள்.
அதே போல பாசன வசதி பெறும் மற்றும் பாசன வசதி பெறாத விவசாய நிலங்களை அரசு நிர்ணயித்துள்ளஅளவுக்கு மேல் வைத்திருப்பவர்களின் குழந்தைகளுக்கும், தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின்குழந்தைகளுக்கும் இது பொருந்தும் என மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications