For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எஸ்.எஸ்.சந்திரன் குடும்பத்தில் இன்னொரு பிரச்னை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தம்பி மருமகள் போட்ட வழக்கினால் சிக்கலில் சிக்கித் தவிக்கும் நடிகர்எஸ்.எஸ்.சந்திரனுக்கு அவரது மருமகன் மூலம் இன்னொரு பிரச்சினைஆரம்பித்துள்ளது. எஸ்.எஸ்.சந்திரனின் மகளிடமிருந்து விவாகாரத்து வழங்கக் கோரிஅவரது கணவர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

எஸ்.எஸ்.சந்திரனின் தம்பி மகன் தனசேகரனின் மனைவி லதா, மதுரை போலீஸில்வரதட்சணைப் புகார் கொடுத்தார். இதையடுத்து எஸ்.எஸ்.சந்திரன், அவரது மகள்கண்மணி, தம்பி மகன் தனசேகரன், அவரது தங்கை உள்ளிட்ட 7 பேர் மீது போலீஸார்வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் தனசேகரனும், அவரது தங்கையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.மற்றவர்கள் முன்ஜாமீன் பெற்றுள்ளனர். இந்த நிலையில், எஸ்.எஸ்.சந்திரனின்மருமகன் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்துள்ளார்.

சந்திரனின் மகள் கண்மணியின் கணவர் கோவிந்தராஜன். இவர் சென்னை மத்தியதோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த1995ம் ஆண்டு திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

கடந்த சில ஆண்டுகளாக கோவிந்தராஜனுக்கும், கண்மணிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு பிரச்சினை உருவானது. இதையடுத்து தனது தந்தை வீட்டுக்குவந்தார் கண்மணி.

இந்த நிலையில், விவாகரத்து கேட்டு கோவிந்தராஜன் குடும்ப நல நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், எங்களுக்கு திருமணம் ஆன நாளிலிருந்தே தனதுதந்தை வீட்டில்தான் கண்மணி அதிகம் இருந்தார்.

என்னை அவர் மதித்ததே கிடையாது. அடிக்கடி சண்டை போடுவார். ஒருமுறைகோபத்தில் தனது கழுத்தில் இருந்த தாலியைக் கழற்றித் தூக்கி எறிந்து விட்டார்.

மனைவிதான் இப்படி என்றால் அவரது தந்தையான எஸ்.எஸ்.சந்திரன் என்னைபலமுறை மிரட்டியுள்ளார். எங்களுக்கு 2வது குழந்தை பிறந்தபோது, எனதுமனைவியை சந்திக்க அவர்கள் விடவே இல்லை .

போனில பேசக் கூட அனுமதிக்கவில்லை. எனக்கு உடல் நலம் சரியில்லாமல்இருந்தபோது, என்னை பார்க்க கண்மணி வரவே இல்லை.ஒருமுறை எனது பெயரில் ரூ. 10 லட்சம் கடன் வாங்கி ஒயின்ஷாப் பிசினஸைஆரம்பித்தார் சந்திரன்.

இதன் பிறகு மேலும் ரூ. 30 லட்சம் கடனாக வாங்கித் தருமாறு கண்மணி மூலம்எனக்கு நெருக்குதல் கொடுத்தார் சந்திரன். இதற்கு மேலும் கண்மணியுடன் வாழமுடியாது என்பதால்தான் விவகாரத்து கோருவதாக கோவிந்தராஜன் தனது மனுவில்கூறியுள்ளார். இம்மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X