இந்திய கிரிக்கெட் அணியின் ரகசிய பயிற்சி!
பெங்களூர்:
இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள்,ரகசியமான முறையில் பயிற்சி முகாமில் கலந்து கொண்டுள்ளனர்.
இலங்கையில், தென்னாப்பிரிக்கா, இலங்கை மற்றும் இந்தியா கலந்து கெள்ளும்முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதற்கானஇந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.இந் நிலையில் இந்திய அணி வீரர்கள், அணி பயிற்சியாளர் கிரகோரி ஆலன் கிங்மற்றும் பயோ மெக்கானிஸ்ட் இயான் பிரேசர் ஆகியோர் தலைமையில்பெங்களூரிலிருந்து பயிற்சிக்காக கிளம்பினர். அவர்கள் எங்கு பயிற்சிமேற்கொள்ளவுள்ளனர் என்பது தெரிவிக்கப்படவில்லை.
இந்திய வீரர்களுக்கு 7 நாள் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி முகாம்நடைபெறும் இடத்தை ரகசியமாக வைத்திருப்பதற்கான காரணத்தை இந்திய கிரிக்கெட்வாரியம் தெரிவிக்கவில்லை.
பெங்களூர் அருகே எலஹங்கா என்ற இடத்தில் பயிற்சி முகாம் நடைபெறுவதாக ஒருதகவல் கூறுகிறது. இந்த பயிற்சி முகாமுக்குப் பின்னர் உள்ளரங்க பயிற்சியிலும்,பீல்டிங் பயிற்சியிலும் இந்திய வீரர்கள் ஈடுபடுத்தப்படுவர்.
ஜூலை 29 முதல் 31ம் தேதி வரை இந்த பயிற்சி நடைபெறும். இந்த பயிற்சியைகாண மட்டுமே பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
10ம் தேதி அவர்கள் சென்னை வழியாக கொழும்புக்கு செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications