சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் அருகே 9 வயது பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்யப்பட்டுள்ளார். அவரது உடல் கரும்பு தோட்டத்தில் மீட்கப்பட்டது.
கடலூர் அருகே உள்ள வரக்கால்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமு. இவருடையமனைவி இறந்துவிட்டார். இதையடுத்து செல்லஞ்சேரியில் உள்ள தனது மாமியார்வீட்டில் தனது 3 பெண் குழந்தைகளுடன் வசித்து வந்தார் ராமு.இவரது மூத்த மகள் அலமேலு, 5ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் மதியஉணவை பள்ளியில் சாப்பிட்ட அலமேலு. அதன் பிறகு காணாமல் போனார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. பின்னர் கிராம கரும்பு தோட்டத்தில்அலமேலு இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுஅலமேலு இறந்து கிடந்தார்.
அவரது உடல் அருகே பள்ளி சீருடைகள் கிடந்ததன. சம்பவ இடத்துக்கு போலீஸ்மோப்ப நாய் வர வழைக்கப்பட்டது. அலமேலு சடலமாக கிடந்த பகுதியை சுற்றி வந்தமோப்ப நாய் பள்ளி அருகே வந்து நின்றது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து குற்றாவளியை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications