கிருஸ்துவர்களுக்கு இட ஒதுக்கீடு-கருணாநிதி உறுதி
சென்னை:
சிறுபான்மையினரான கிருஸ்துவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு கிடைக்கச் செய்ய அனைத்துமுயற்சிகளும் எடுப்பேன் என முதல்வர் கருணாநிதி கூறினார்.
தமிழகத்தைச் சேர்ந்த 17 மறை மாவட்டங்களின் கத்தோலிக்க ஆயர்கள் முதல்வர் கருணாநிதியை சந்தித்தனர்.அப்போது, சிறுபான்மையினர் நலத் துறையை உருவாக்கியதற்காகவும் மதமாற்றத் தடை சட்டத்தைநீக்கியதற்காகவும் கிருஸ்துவர்களுக்கும் தனி இட ஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றுஅறிவித்ததற்காகவும் கருணாநிதிக்கு நன்றி தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்துப் பேசிய கருணாநிதி,
உங்களை சந்திக்கக் கிடைத்த வாய்ப்புக்காக பெருமை அடைகிறேன். நம் அடுத்த சந்திப்பு உங்களது முக்கியகோரிக்கையான கல்வி, வேலை வாய்ப்புக்களில் இட ஒதுக்கீடு சிறுபான்மையினருக்கும் கிடைத்தது என்றஅறிவிப்புக்குப் பின் நடைபெறுகின்ற சந்திப்பாக இருக்க வேண்டும் என்பது தான் என் ஆசை.
அந்த ஆசை நிறைவேற எல்லா வகையிலும் பாடுபடுவேன் என்பதை உங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.நீங்கள் என் பாலும், என் தலைமையிலான இயக்கத்தின் பாலும், திமுகவின் ஆட்சியின்பாலும் கொண்டுள்ளஅன்பை, பெருமை வாய்ந்த பாராட்டை நினைத்து மகிழ்கிறேன். இது எவரிடத்திலும் காண முடியாதபேரன்பாகும்.
உங்கள் பேரன்புக்கு நன்றி என்றார்.
மருத்துவமனையில் தயாளு அம்மாள்:
இந் நிலையில் முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் மருத்துவ பரிசோதனைகளுக்காக போரூர் எஸ்ஆர்எம்சிமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரண்டு நாட்களாக அவர் மருத்துவமனையிலேயே உள்ளார்.












Click it and Unblock the Notifications