கள்ளுக் கடைகளைத் திறக்க மதிமுக கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் மீண்டும் கள்ளுக் கடைகளைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சட்டசபையில் மதிமுக எம்எல்ஏ கண்ணப்பன் கோரிக்கை விடுத்தார்.

பட்ஜெட் மீதான விவாதத்தில்கலந்து கொண்டு கண்ணப்பன் பேசுகையில்,

கள்ளை விட அதிக போதை தரும் வெளிநாட்டு மது வகைகள் சட்டப்பூர்வமாகவிற்கப்படுகிறது. இந்த வெளிநாட்டு மது வகைகளை உற்பத்தி செய்யும் பெரும்முதலாளிகள், இந்திய அரசியலிலும், மாநில அரசியலிலும் தலையிட்டு எதையும்சாதித்துக் கொள்ள முடிகிறது.

ஆனால் கள் இறக்குபவர்கள், விற்பவர்கள், அதை குடிப்பவர்கள் அனைவருமேஏழைகள் என்பதால் இவர்களால் அரசு நிர்வாகத்தில் தலையிட்டு ஆட்டிப் படைக்கமுடியாது.

தமிழகத்தில் 5 கோடி தென்னை மரங்கள் உள்ளன. தென்னை விவசாயிகள் சமீபகாலமாக தென்னை மரங்களைத் தாக்கும் சிலந்தி நோயால் வருமானக் குறைவுஏற்பட்டு மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

தென்னை, பனை ஏறும் தொழிலில் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.கள்ளச் சாராயத்தை ஒழிக்கவும், தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்குமதிசெய்து விற்பனை செயயவும் அரசு முடிவெடுக்க வேண்டும்.

தமிழகத்திற்கு அருகாமையில் உள்ள காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான கேரளா,புதுவையில் கள் இறக்க அனுமதி இருப்பதால் தமிழகத்திலும் இதை அனுமதிக்கவேண்டும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+