For Daily Alerts
Just In
தனியார் துறையில் இட ஒதுக்கீட்டுக்கு தொழில் துறையினர் எதிர்ப்பு
டெல்லி:
தனியார் துறை வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டு சட்டம் இயற்றுவற்கு இந்தியதொழிலகக் கூட்டமைப்பு (சிஐஐ), தொழில் வர்த்தக சங்கங்கள் பேரவை (ஆசோசெம்)ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தனியார் துறை வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய ஜேஜே.இரானிதலைமையில் சிஐஐ ஒரு குழுவை அமைத்தது. இந்தக் குழ தனது அறிக்கையைபிரதமர் மன்மோகன் சிங்கிடம் வழங்கியது.இரானி, சிஐஐ தலைவர் ஆர்.சேஷசாயி, அசோசெம் தலைவர் அனில் அகர்வால்ஆகியோர் இதை பிரதமரிடம் வழங்கினர்.
அந்த அறிக்கையில் வேலைவாய்ப்பு விஷயத்தில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தவதுவேலைவாய்ப்பு அளிப்பவர்களின் சுதந்திரத்தில் தலையிடுவது போலாகும் என்றும்,இத் திட்டத்தை கைவிட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Comments
Story first published: Friday, July 28, 2006, 5:30 [IST]