தாவூத் இப்ராகிமின் வணிக வளாகம் இடிப்பு!

Subscribe to Oneindia Tamil

மும்பை:

தாதா தாவூத் இப்ராகிமுக்குச் சொந்தமான வணிக வளாகத்தை இடிக்கும் பணியைமும்பை மாநகராட்சி தொடஙகியுள்ளது.

தெற்கு மும்பையில், கிராப்போர்ட் மார்க்கெட் பகுதியில் தாவூத் இப்ராகிக்குச்சொந்தமான இரண்டு வணிக வளாகங்கள் உள்ளன. சாரா சஹாரா என்றுபெயரிடப்பட்ட இந்த வணிக வளாகங்களை தாவூத்தின் நெருங்கிய கூட்டாளியானஅப்துல் சத்தார் என்பவர் கடந்த 2001ம் ஆண்டு கட்டினார்.

மத்திய அரசின் பொதுப் பணித்துறைக்குச் சொந்தமான இடத்தில் இந்த கட்டடம்கட்டப்பட்டிருந்ததால், இதுதொடர்பாக மகாராஷ்டிர மாநில அரசு வழக்குதொடர்ந்தது. இந்த வழக்கில் கட்டடம் கட்ட அனுமதி கொடுத்த நான்கு மும்பைமாநகராட்சி பொறியாளர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கட்டடத்தை இடிக்க அனுமதி கோரி மும்பை நீதிமன்றத்தில் மாநகராட்சிசார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ற மும்பை நீதிமன்றம் கட்டடத்தைஇடிக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து அப்துல் சத்தார் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்யப்பட்டது. இடிக்கும் பணிக்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றுசத்தார் தரப்பு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இடைக்காலத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இடிக்கும் பணியை தொடங்கலாம் எனவும் அனுமதித்தது. இதையடுத்து,இன்று காலை வணிக வளாகங்களை இடிக்கும் பணி தொடங்கியது.

இந்த வணிக வளாகத்தில் 350 கடைகள் மற்றும் கிட்டங்கிகள் உள்ளன. பலத்தபோலீஸ் பாதுகாப்புடன் இந்த வளாகத்தை இடிக்கும் பணியில் மும்பை மாநகராட்சிஅதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மும்பை குண்டு வெடிப்புக்குப் பின் பாகிஸ்தானுக்கு தப்பிவிட்ட தாவூதின் பலசொத்துக்கள் அரசால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆனால், அவற்றை ஏலம் விட்டால் அதை வாங்க யாரும் முன் வருவதில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+