கன்னியாகுமரியில் மீண்டும் உள்வாங்கி கடல்

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியில் மீண்டும் கடல் உள் வாங்கியது. இதையடுத்து விவேகானந்தர்பாறைக்கு படகுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது.

நேற்று காலையில் கன்னியாகுமரி கடலில் பயங்கர சீற்றம் ஏற்பட்டது. ராட்சதஅலைகள் வீசின. இருப்பினும் வழக்கம் போல நேற்று காலை 8 மணிக்குவிவேகானந்தர் பாறைக்கு படகு போக்குவரத்து தொடங்கியது.

Kanyakumari
அதன்பிறகு காலை 8.30 மணிக்கு விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர்சிலைக்கு படகு சென்றது. நேரம் செல்ல செல்ல கடலில் அலையின் வேகம்அதிகரித்தது. சுமார் 10 அடி முதல் 15 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள்ஆக்ரோஷமாக எழந்தன.

இந் நிலையில் திருவள்ளுவர் பாறைக்கு அருகில் கடலின் நீர்மட்டம் திடீர் என்றுகுறைந்தது. இதனால் படகு தரை தட்டியது. திருவள்ளுர் பாறையில் உள்ளபடகுதளத்துக்கு படகை கொண்டு சென்று நிறுத்த முடியாத அளவுக்கு அலையும்பயங்கரமாக வீசியது.

திருவள்ளுவர் பாறையில் இருந்த நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் தவித்தனர்.அவர்களை அவசர அவசரமாக அங்கு இருந்து வெளியேற்றி படகு மூலம்கரையேற்றினார்கள்.

விகோனந்தர் பாறையில் இருந்த 1000க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளும் அங்குஇருந்து அவசர அவசரமாக படகு முலம் கரைக்கு கொண்டு வரப்பட்டனர்.அதன்பிறகு காலை 9.15 மணிக்கு படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

கடலில் நீர் மட்டம் குறைந்து கடல் உள்வாங்கியதால் கடலுக்கு அடியில் இருந்தபாறைகளும், அதன் மீதுள்ள கடல் பாசிகளும் வெளியே தெரிந்தன.

கடந்த ஒரு வாரத்தில் கன்னியாகுமரி பகுதியில் கடல் உள்வாங்கியுள்ளது இது 3வதுமுறையாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+