பிஎஸ்என்எல்: 1 நிமிடத்துக்கு 10 பைசா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஒரு நிமிடத்துக்கு 10 பைசா கட்டணத்தை பிஎஸ்என்எல் செல்போனில் அறிமுகம்செய்துள்ளது.
இதுகுறித்து பிஎஸ்என்எல் நிறுவனமம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,பிஎஸ்என்எல் செல்ஒன் வாடிக்கையாளர்கள், தமிழகத்தில் குறிப்பிட்ட 2 எண்களுக்கு1 நிமிடத்துக்கு 10 பைசா கட்டணத்தில் பேசிக் கொள்ளலாம். இது போஸ்ட் பெய்ட்,பிரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.
ஆனால் எக்செல் ஆனந்த், எக்செல் ஒன் இந்தியா திட்டங்களில் உள்ளவர்களுக்கு இதுபொருந்தாது. இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள், செல்போன், லேண்ட லைன்,டபிள்யூஎல்எல். இவற்றில் ஏதேனும் 2வாடிக்கையாளர்களுடன் பேசமுடியும்.தேர்ந்தெடுக்கப்படும் 2 எண்களை தவிர்த்து மற்ற அழைப்புகளுக்கு வழக்கமானகட்டணம் வசூலிக்கப்படும்.
ஆனால் 2 எண்களில் ஒரு எண், கட்டாயமாக லேண்ட் லைனாக இருக்க வேண்டும்.ஒரு முறை தேர்ந்தெடுத்து அனுப்பிய எண்கள் 6 மாத காலத்துக்கு மாற்ற முடியாதுஎன்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications