88 வயதில் அப்பா ஆன தாத்தா!
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் 88 வயதான ஒரு தாத்தாவின் 40 வயது மனைவிக்கு அழகான ஆண் குழந்தைபிறந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்தவர் வீர்மரம். இவருக்கு 88 வயதாகிறது. தனது 70வது வயதில்ஜமுதேவி என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். அப்போது தேவிக்கு 22 வயதுதான்.வீர்மரத்திற்கு ஜமுதேவி 3வது மனைவி ஆவார். ஏற்கனவே தனது முதல் கணவர் மூலம் ஜமுதேவிக்கு 15 வயதில்ஒரு மகன் உள்ளார்.
வீர்மரத்தின் முதல் மனைவி மாலு தேவி. தனது 22வதுவயதில மாலு தேவியை வீர்மரம் திருமணம் செய்தார்.ஆனால் கல்யாணமாகி 20 ஆண்டுகள் ஆகியும் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதையடுத்து ஜம்னா தேவிஎன்பவரை 2வது கல்யாணம் செய்தார் வீர்மரம்.
ஆனால் கல்யாணம் ஆன சிறிது காலத்திலேயே ஜம்னா தேவி இறந்து விட்டார். இதனால் இதையடுத்து தனதுஉறவினரின் குழந்தையான ஷேராராம் என்பவரை தத்தெடுத்தார் வீர்மரம். ஆனால், அவர் தனது 50வது வயதில்இறந்துவிட்டார்.
தனிமையில் வசித்து வந்த வீர்மரம், ஜமுதேவியை 3வதாக கல்யாணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 10நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்துள்ளது.
சபாஷ் தாத்தா!












Click it and Unblock the Notifications