ஏட்டுக்கள் கட்டிப் புரண்டு சண்டை: வயர்லெஸ்சில் லைவ்-ரிலே!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை அருகே மாங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் இரண்டு தலைமைக் காவலர்கள் கோணிஊசியால் மாறிமாறி குத்திக் கொண்டு கட்டிப் புரண்டு சண்டை போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாங்காடு காவல் நிலையத்தில் தலைமைக் காவலர்களாக இருப்பவர்கள் ரங்கராஜன் மற்றும் ராஜா. இதில்ரங்கராஜன் ஜீப் டிரைவராக பணியாற்றி வருகிறார். ராஜா குற்றப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.

ஒரு வழக்கு தொடர்பாக இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடுமையாக வாக்குவாதம் செய்தஇருவரும் திடீரென கட்டிப் புரண்டு சண்டை போட ஆரம்பித்தனர்.

அதிர்ந்து போன மற்ற காவலர்கள் அவர்களை பிரித்து விட கடுமையாக முயன்றனர். ஆனால் முடியவில்லை.வெறும் கையால் அடித்துக் கொண்டிருந்த ராஜா திடீரென சேரை தூக்கி ரங்கராஜன் மீது வீசி எறிந்து தாக்கினார்.இதில், ரங்கராஜன் காயமடைந்தார்.

வலி தாங்க முடியாமல் அலறிய ரங்கராஜன், சாக்குப் பையை தைக்கும் கோணி ஊசியை எடுத்து ராஜாவைசரமாரியாகக் குத்தினார். இதில் ராஜாவுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது.

ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டே இடையிடையே வயர்லெஸ் அருகே சென்று மைக்கில் ஒருவர் மீதுஒருவர் கடுமையாக குற்றம் சாட்டிக் கொண்டனர். இதனால் வயர்லெஸ்சில் இவர்களது சண்டை லைவ் ரிலேஆனது.

சார் இவன் என்னை அடிக்கிறான், இல்லை இவன் தான் என்னை குத்துறான் என்று வயர்லெஸ்சில் புகார்கூறியபடியே சண்டை போட்டனர்.

வாக்குவாதமும், அடிதடியும் நேரடியாக தங்களது வயர்லெஸ்களில் ஒலிபரப்பாக, அதைக் கேட்ட மாநகர காவல்துறையின் பிற அதிகாரிகளும் போலீசாரும் அதிர்ச்சியடைந்தனர்.

வயர்லெஸ்சில் இந்த சண்டையைக் கேட்ட இன்ஸ்பெக்டர் முருகேசன் விரைந்து வந்து இருவரையும்விலக்கிவிட்டார். இருவரிடமும் துறைரீதியில் விசாரணை நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+