மதானிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டருக்கு மிரட்டல்
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை தொடர் குண்டு வெடிப்புக் கைதி அப்துல் நாசர் மதானிக்கு சிகிச்சை அளித்தால் பலவித சங்கடங்களைஎதிர்கொள்ள நேரிடும் என அவருக்கு சிகிச்சை அளித்து வரும் ஆயுர்வேத மருத்துவமனையின் தலைமைடாக்டருக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மதானிக்கு தமிழக அரசின் உத்தரவின் பேரில் சிறைக்குள்ளேயேதினமும் ஆயுர்வதே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோவையில் உள்ள ஆர்ய வைத்தியசாலை ஆயுர்வேதமருத்துவமனையின் தலைமை டாக்டர் ரவீந்தரன் தலைமையிலான மருத்துவர் குழு இந்த சிகிச்சையை அளித்துவருகிறது.இந் நிலையில் ரவீந்தரன் பெயருக்கு அவரது மருத்துவமனைக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. மலையாளத்தில்எழுதப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில்,
மதானிக்கு சிகிச்சை அளிக்கக் கூடாது. சிறைவாசியான அவருக்கு சிகிச்சை அளித்து உடல் நலம் பேண வேண்டும்என்பது நல்லதல்ல. மீறி சிகிச்சை அளித்தால், பலவிதமான சங்கடங்கள் நேரிடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கோவை ராமநாதபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications