ஷோபா கைது: தந்திரி மோகனரு சந்தோஷம்!
கொச்சி:
![]() |
கொச்சியில் உள்ள ஃபிளாட்டில், சாந்தா என்ற பெண் உள்ளிட்ட சில விபச்சாரப்பெண்களுடன் தந்திரி கண்டரரு மோகனரு இருப்பது போல புகைப்படம்எடுக்கப்பட்டது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
![]() |
இந்த நிலையில் ஷோபாதான், மோகனருவை புகைப்படம் எடுக்க கூலிப படையைஏவியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து ஷோபா, அவரது கூட்டாளிகள்விஜில் மற்றும் அணில்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
![]() |
இந்த கைது குறித்து தந்திரி மோகனரு கூறுகையில், ஐயப்பன் என்னுடன் இருக்கிறார்.எனக்கு எதிரான அனைத்துப் புகார்களும் பொய் என்று நிரூபிக்கப்படும். நான்அப்பாவி என்பது தெரிய வரும் என்றார்.
தந்திரியின் வழக்கறிஞர் ராம்குமார் கூறுகையில், வழக்கு விசாரணை சரியானகோணத்தில் சென்று கொண்டுள்ளது. குற்றம் இழைத்த அனைவரையும் கைது செய்யவேண்டும். தந்திரியின் பெயரைக் கெடுக்க சதி திட்டம் தீட்டிய யாரையும் விடக்கூடாது.
தற்போது ஷோபா ஜான் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் தந்திரிகொடுத்த புகார் பொய் இல்லை என்பது தெளிவாகியுள்ளது என்றார் ராம்குமார்.















Click it and Unblock the Notifications