For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தர்மபுரி-கிருஷ்ணகிரி குடிநீர் திட்டம்-ஜப்பான் உதவி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தர்மரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் குடிநீர் தேவைக்கு நிரந்தர தீர்வு காணஜப்பான் உதவியோடு கூட்டுக் குடிநீர் திட்டம் அமலாக்கப்படவுள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

தர்மபுரியிலிருந்து 45 கிமீ ஒனேக்கல் அருகில் ஓடும் காவிரி ஆற்றினை நீர்ஆதாரமாகக் கொண்டு ஒரு கூட்டுக் குடிநீர் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

காவிரி ஆற்றின் நாளாைன்றுக்கு 160 மில்லியன் லிட்டர் நீர் எடுக்க உரிய அனுமதிமத்திய அரசிடமிருந்து பெறப்பட்டுள்ளது. ரூ. 1,005 கோடி செலவில்தீட்டப்பட்டுள்ள இத் திட்டத்துக்கு ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு வங்கியிடம்நிதியுதவி மத்திய அரசின் நகர்ப்புற அமைச்சகம், மத்திய பொருளாதாரவிவாகத்துறைக்கு பரிந்துரை செய்திருந்தது.

இதையடுத்து ஜப்பான் வங்கி அதிகாரிகள் குழு முதல்வர் கருணாநிதியை சந்தித்துவிரிவாக ஆலோசனை நடத்தியது.

அதன் தொடர்ச்சியாக தற்பொழுது பிரதமர் மன்மோகன் சிங், முதல்வர் கருணாநிதிக்குஎழுதியுள்ள கடிதத்தில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு ஜப்பான் பன்னாட்டுகூட்டுறவு வங்கியிலிருந்து நிதியுதவி பெறுவதற்கு, ஜப்பான் நாட்டு அரசுக்குப்பரிந்துரை செய்து அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அந்த செய்தி வெளியீட்டில் கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X