For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதியுடன் எம்.கே. நாராயணன் சந்திப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

இலங்கை விவகாரம் தொடர்பாக முதல்வர் கருணாநிதியை,தேசியபாதுகாப்புஆலோசகர் எம்.கே.நாராயணன் இன்று சந்தித்துப் பேசினார்.

MK Narayanan with Karunanidhi

இலங்கையில் தமிழர் பகுதிகள் மீது இலங்கை ராணுவம் சமீபத்தில் கடும் தாக்குதல்நடத்தியது. இதைத் தொடர்ந்து இலங்கைப் பிரச்சினை குறித்து தமிழக கட்சிகள்கவலை தெரிவித்தன.

இதையடுத்து இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கை சென்று அந் நாட்டுஅதிபருடன் பேச்சு நடத்தினார்.

மேலும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என்று கோரியும்தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் கோரி பிரதமர் மன்மோகன்சிங்குக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியிருந்தார்.

இதைத் தொடர்ந்து தனது சார்பில் இதுகுறித்து விவாதிக்க தேசிய பாதுகாப்புஆலோசகர் எம்.கே.நாராயணனை சென்னைக்கு அனுப்பி வைப்பதாக மன்மோகன்சிங் தெரிவித்திருந்தார்.

இதைச் சொல்லி ஒரு மாதத்துக்கும் மேலாகிவிட்ட நிலையில் இன்று நாராயணன்சென்னை வந்தார். தலைமைச செயலகத்தில் கருணாநிதியை சந்தித்து சுமார்முக்கால்மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் நாராயணன் பேசுகையில், பிரமதரின் தூதராகமுதல்வரைச் சந்தித்தேன். இலங்கை விஷயத்தில் தற்போது மத்திய அரசுமேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், இந்தியாவின் நிலைப்பாடு ஆகியவை குறித்துமுதல்வரிடம் விவரித்தேன்.

இலங்கையில் வசிக்கும் தமிழர்களின் பாதுகாப்பு குறித்து நேற்று டெல்லி வந்தஅந்நாட்டு வெளியுறவு அமைச்சர் சமரவீராவிடம் இந்தியாவின் சார்பில் உறுதியுடன்வலியுறுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளையும், தமிழர்களையும் ஒரே மாதிரியாகக் கருதக் கூடாது என்றும்சமரவீராவிடம் கூறப்பட்டுள்ளது என்றார் நாராயணன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X