நடுரோட்டில் தாய்-மகள் தீக்குளித்து தற்கொலை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் நடு ரோட்டில் தீக்குளிதது தாயும், மகளும் பரிதாபமாக இறந்தனர்.

ஆவடி நந்தவனம் மேட்டூரைச் சேர்ந்த மோகன்-சகுந்தலா தம்பதியின் மகள் உஷா.உஷாவின் கணவர் பெயர் சுப்பிரமணியம். இவர்களுக்கு நவீதா என்ற மகள் உள்ளார்.

மின்சார வாரியத்தில் வேலை பார்த்த மோகன் சமீபத்தில் ஓய்வு பெற்றார். அவருக்குஓய்வு காலத்துக்குரிய செட்டில்மெண்ட் பணம் வந்தது. அந்தப் பணத்தை தனதுகணவர் தொழில் செய்ய கொடுக்குமாறு உஷா கேட்டுள்ளார்.

ஆனால் மோகன் பணம் தர மறுத்து விட்டார்.

இதையடுத்து உஷா கோபித்துக் கொண்டு அவரது வீட்டிற்குச் சென்று விட்டார். மகள்கோபித்துக் கொண்டு போய் விட்டாளே என்ற ஆதங்கத்தில் தாயார் சகுந்தலா மகள்வீட்டுக்குச் சென்றார்.

உஷாவை சமாதானப்படுத்த முயன்றார். ஆனால் முடியவில்லை. தாயாருடன் ஏற்பட்டவாக்குவாதத்தில் உஷா தன் உடலில் மண்ணெண்ணை ஊற்றி கொண்டு தெருவுக்குவந்தார். அங்கு உடலில் தீயைப் பற்ற வைத்துக் கொண்டார்.

இதைப் பார்த்து பதறிய சகுந்தலா தன் மீதும் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டுதானும் தீக்குளிததார்.

இருவரும் உடல் கருகிய நிலையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+