அணுமின் நிலையத்திற்கு கமாண்டோ பாதுகாப்பு
சென்னை:
சென்னை அருகே கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு மின் நிலையத்திற்குதேசிய பாதுகாப்புப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மும்பை ரயில் நிலையங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்ப்வம் தொடர்பாகசிலரைமும்பை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்தியவிசாரணையில், திரவ நைட்ரேட் வெடிபொருளை பயன்படுத்திய தெரியவந்தது.இத்தகைய வெடிபொருட்கள், அணு மின் நிலையங்களில் மட்டுமேபயன்படுத்தப்படுகிறது என்பதால் இந்தியாவில் உள்ள ஏதாவது அணு மின்நிலையத்திலிருந்து தான் இவை திருடப்பட்டிருக்க வேண்டும் என்று பாதுகாப்புப்படையினர் கருதுகின்றனர்.
இதையடுத்து இந்தியா முழுவதும் உள்ள அணு மின் நிலையங்களில் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கல்பாக்கம் அணு மின் நிலையத்திலும்பாதுகாப்பை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டது. தற்போது கல்பாக்கம் அணு மின்நிலையத்திற்கு மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியைமேற்கொண்டு வருகினறனர்.
கூடுதலாக தேசிய பாதுகாப்புப் படை வீரர்களை பாதுகாப்பில் ஈடுபடுத்த தற்போதுமுடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காஞ்சிபுரத்தில் மாவட்ட காவல்துறைகண்காணிப்பாளர் அமல்ராஜ் அலுவலகத்தில் ஆலோசனை நடந்தது. இதில் மத்தியதொழிலக பாதுகாபுப் படை அதிகாரிகள், மாநில டிஜிபி, மத்தியதொழிலகபாதுகாப்புப் படை கூடுதல் டிஜிபி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனையில் கருப்புப் பூணைப் படையினரை எந்த வகையில்பயன்படுத்திக் கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications