மோசடி மன்னன் ஆனந்தராஜின் மனைவி கோர்ட்டில் சரண்!
வேலூர்:
வீடு கட்டித் தரும் திட்டம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம் பலகோடி பணத்தை மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள பிஷப் ஆனந்தராஜின்மனைவி டெய்சி ஆனந்தராஜ், வேலூர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் அருகே பேரூர் என்ற இடத்தில் மோலின் மிஷன்சர்ச் மற்றும் ரூரல் ரிசோர்சஸ் ரிசர்ச் மையம் என்ற பெயரில் நிறுவனங்களை நடத்திவந்த ஆனந்தராஜ், வீடு கட்டித் தரும் திட்டம் என்ற பெயரில், தமிழகம், ஆந்திராமற்றும் கேரளாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களை ஏமாற்றி பலகோடி பணத்தை சுருட்டியதாக புகார்கள் கிளம்பின.இதையடுத்து சில நாட்களுக்கு முன்புஆனந்தராஜ் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டார். அவரது மனைவி டெய்சி, ஐந்து மகள்கள், வளர்ப்பு மகன் சுரேஷ்,உதவியாளர் பழனி உள்ளிட்ட அத்தனை பேரும் தலைமறைவாகி விட்டனர்.அவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிரமாக முயன்று வந்தனர்.
இந்த நிலையில் ஆனந்தராஜின் மனைவி டெய்சி, வேலூர் நீதிமன்றத்தில் நேற்றுசரணடைந்தார். அவருடன் வழக்கறிஞர்கள் சிலரும் வந்திருந்தனர். வேலூர் மாவட்டமாஜிஸ்திரேட் ராமச்சந்திரன் முன்னிலையில் சரணடைந்த டெய்சியை ஆகஸ்ட் 18ம்தேதி வரை சிறைக் காவலில் வைக்குமாறும், 18ம் தேதி திருக்கழுக்குன்றம்நீதிமன்றத்தில் டெய்சியை ஆஜர்படுத்த வேண்டும் என்றும்மாஜிஸ்திரேட்உத்தரவிட்டார்.
டெய்சி மீது மோசடிக்கு உடந்தையாக இருந்தது உள்ளிட்ட 2 வழக்குகளை போலீஸார்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications