சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏ. வெளியேற்றம்; கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட்!
சென்னை:
தமிழக சட்டசபையில் இன்று கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சி பெண்எம்.எல்.ஏக்களைப் பார்த்து ஆபாசமாக பேசியதாக கூறி அதிமுக உறுப்பினர் அக்ரிகிருஷ்ணமூர்த்தி இன்று வெளியேற்றப்பட்டார்.
நடப்புக்கூட்டத் தொடர் முழுவதும் அவர் கூட்டத்தில் கலந்து கொள்ள தடைவிதிக்கப்பட்டது. தமிழக சட்டசபையில் இன்று தொழிலாளர் நலத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அதில் கலந்துகொண்டு மார்க்சிஸ்ட்கம் யூனிஸ்ட்உறுப்பினர் பாலபாரதி பேசினார்.அப்போது அதிமுக உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி குறுக்கிட்டு ஆவேசமாக ஏதோகூறினார். இதற்கு திமுக, கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.பதிலுக்கு அதிமுக உறுப்பினர்களும் கடுமையாக வாதம் செய்தனர். இதனால்சபையில் கடும் அமளி நிலவியது.
இந்த நிலையில், காங்கிரஸ் உறுப்பினர் ராணி வெங்கேடசன் உள்ளிட்ட பெண்எம்.எல்.ஏக்கள் எழுந்து, பின்வரிசையில் அமர்ந்துள்ள அதிமுக உறுப்பினர்கள்தொடர்ந்து எங்களைப் பார்த்து ஆபாசமாக பேசுகிறார்கள். காது கொடுத்து கேட்கமுடியாத அளவுக்கு அசிங்கமாக பேசுகிறார்கள்.
இதற்கு சபாநாயகர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினர்.இந்த சமயத்தில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி செருப்பால் அடிப்பேன் என்று கோபமாகபேசினார். இதைத் தொடர்ந்து அவரை அவையிலிருந்து வெளியேற்று மாறுசபாநாயகர் உத்தரவிட்டார். மேலும், அமளியில் ஈடுபட்ட அதிமுகஉறுப்பினர்களையும் வெளியேற்ற உத்தரவிட்டார்.
மேலும், அக்ரி கிருஷ்ணமூர்த்தியை இந்த கூட்டத் தொடர் முழுமைக்கும் கலந்துகொள்ள தடை விதித்தும் சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார்.












Click it and Unblock the Notifications