மன்னர் பட்டம் சூட்டப்பட்ட அயர்லாந்து ஆடு!
டப்ளின்:
அயர்லாந்து நாட்டில் நடந்த திருவிழாவில், ஆடு ஒன்று அந்நாட்டின் மன்னராக தேர்வுசெய்யப்பட்டு பட்டம் சூட்டப்பட்டது.
அயர்லாந்து நாட்டின் கில்லோர் கிளின் என்ற கிராமத்தில் பல காலமாக ஒரு நூதனதிருவிழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல்12ம் தேதிவரை மூன்று நாட்களுக்கு கொண்டாடப்படும் இந்த விழாவில், பாட்டு, ஆட்டம், குடிஎன அமர்க்களப்படும்.இந்த விழாவில் ஒருமுக்கியமான நிகழ்ச்சியாக ஆட்டுக்கடா ஒன்றைப் பிடித்து வந்துஅதை அயர்லாந்து நாட்டு மன்னராக முடி சூட்டுவார்கள். பின்னர் அந்தஆட்டைமுக்கிய வீதி ஒன்றில் மேடை அமைத்து மூன்று நாட்களும் அங்கேயே கட்டிவைத்து ராஜ உபச்சாரம் செய்வார்கள்.
இந்த ஆட்டை, அயர்லாந்தின் மிக உயரமான சிகரமான கரன் டூ ஹில் மலையின்அடிவாரத்திலிருந்து பிடித்து வந்து மன்னராக முடி சூட்டுவார்கள். இந்த ஆண்டுவிழாவின் போது லூயிஸ் என்ற ஆட்டுக் கடாவுக்கு மன்னராகும் அதிர்ஷ்டம்கிடைத்தது.
இந்த நூதன விழா எதற்காக கொண்டாடப்படுகிறது, எதற்காக ஆட்டுக்குமுடிசூட்டுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியவில்லை. ஆனாலும் வருடா வருடம்இந்த இசை நிழ்ச்சியும், ஆட்டுக்கு முடி சூட்டுவதும் தவறாமல் நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications