For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெடுமாறன் மாநாட்டுக்கு விதிக்கப்பட்ட தடை ரத்து!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பழ.நெடுமாறன் தலைமையிலான உலகத்தமிழ் பேரவையின் சேலம் மாநாட்டுக்குஅம்மாநகரகாவல் துறை ஆணையர் விதித்த தடை உத்தரவை சென்னைஉயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மாநாட்டுக்கு அனுமதி தருவது குறித்து மீண்டும்பரிசீலனை செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உலகத் தமிழ் பேரவையின் சார்பில் சேலம் நகரில் 12, 13 (இன்றும், நாளையும்)மாநாடு நடத்த ஏறபாடு செய்யப்பட்டிருந்து. ஆனால் இந்த மாநாட்டை நடத்த சேலம்போலீஸ் கமிஷனர் அனுமதி தரமறுத்த விட்டார்.

இதையடுதது பேரவை சார்பில் அதன் செயலாளர் பத்மநாபன் சென்னைஉயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனு அவசர மனுவாக கருதப்பட்டுவிசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதுகுறித்த சேலம் போலீஸ் கமிஷனர்விளக்கம் அளிக்க நீதிபதி ரவிராஜ பாண்டியன் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில்நேற்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில்ஆஜராகி ராஜா கலிபுல்லா வாதிடுகையில், மாநாட்டில் கலந்துகொள்ள வருவோரில்பெரும்பாலானோர் தடை செய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தின்ஆதரவாளர்கள். மாநாட்டில் கலந்து கொள்ளும் போர்வையில் விடுதலைப்புலிகள்ஊடுறுவும் ஆபத்து உள்ளது என்றார்.

பின்னர் பத்மநாபன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் காந்தி, இந்த அரசுதமிழர்களுக்கும், தமிழர் நலன்களுக்கும் ஆதரவான அரசாக இருக்கும் என்றுநம்பினோம். இதை நம்பித்தான் மாநாடு நடத்த முடிவு செய்து, அனுமதி கோரிவிண்ணப்பித்தோம்.

விடுதலைப் புலிகளைஆதரித்து யாரும் பேச அனுமதிக்க மாட்டோம். அப்படிப்பேசினால் போலீஸார் அவர்களை கைது செய்யலாம் என்றும், பாஸ் போர்ட்டுகளைபறிமுதல் செய்யலாம் என்றும் காந்தி தெரிவித்தார்.

இதையடுத்து, சேலம் கமிஷனர் விதித்த தடை உத்தரவை ரத்து செய்து நீதிபதிஉத்தரவிட்டார்.மேலும், மீண்டும் அனுமதி தருவது குறித்து பரிசீலிக்க வேண்டும்எனறும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X