ஜெயக்குமார் போய் செங்கோட்டையன் வந்தார்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அதிமுக தலைமை நிலையச் செயலாளராக இருந்து வந்த முன்னாள் அமைச்சர்ஜெயக்குமார் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக இன்னொரு முன்னாள்அமைச்சரான செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆட்சியில் இருக்கும்போது அமைச்சர்களை மாற்றுவதும் ஆட்சியில் இல்லாதபோதுகட்சி நிர்வாகிகளை மாற்றுவதும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்குவழக்கம்.

அந்த வகையில் சட்டமன்ற தேர்தலுக்குபின் அதிமுக நிர்வாகிகள் பல முறைமாற்றப்பட்டுவிட்டனர். இப்போது மீண்டும் நிர்வாகிகள் மாற்றம்செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அதிமுக தலைமை நிலைய செயலாளர் பொறுப்பில் இருக்கும் டி.ஜெயக்குமார்எம்எல்ஏ, அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் கே.ஏ.செங்கோட்டையன்எம்எல்ஏ, வரகூர் அருணாசலம், ஆர்.சரோஜா, எஸ்என்.ராஜேந்திரன், விஜயலட்சுமிபழனிச்சாமி, அதிமுக மீனவர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் கலைமணிஆகியோர் இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்துவிடுவிக்கப்பட்டுகிறார்கள்.

தமைமை நிலைய செயலாளர் பொறுப்பில் செங்கோட்டையன், மீனவர் பிரிவுசெயலாளர் பொறுப்பில் டி.ஜெயக்குமார், மீனவர் பிரிவு இணை செயலாளர்பொறுப்பில் கலைமணி ஆகியோர் நியமிக்கப்படுகிறார்கள்.

மா.செக்கள் நீக்கம்:

விருதுநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் விநாயகமூர்த்தி நீக்கப்பட்டுஅவருக்கு பதில் அருப்புக்கோட்டை முன்னாள் எம்எல்ஏ கேகே.சிவசாமி, விருதுநகர்மாவட்ட செயலாளராக நியமிக்கப்படுகிறார்.

சிவகங்கை:

சிவகங்கை மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் சுப.கருப்பையா நீக்கப்பட்டுஅவருக்கு பதில் சோழன் சித்.பழனிச்சாமி மாவட்ட செயலாளராகநியமிக்கப்படுகிறார்.

ராமநாதபுரம்:

ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் முருகேசன் நீக்கப்பட்டுஅவருக்குப் பதில் எம்.சுந்தரபாண்டியன் மாவட்ட செயலாளராக நியமிக்ப்படுகிறார்.

மீண்டும் கட்சிக்குள் அனுமதி:

அதிமுகவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டு இருந்த வேலூர் மேற்கு மாவட்டத்தைசேர்ந்த பள்ளிகொண்டா பேரூராட்சி 13வது வார்டு கவுன்சிலர் ஆர்.நடராஜன், 11வதுவார்டு கவுன்சிலர் ஆர்.ரவிக்குமார், 12வது வார்டு கவுன்சிலர் ஆர்.வேலு, 18வதுவார்டு கவுன்சிலர் எம்.மல்லிகா, மகாலிங்கம் ஆகியோர் தங்களது செயலுக்கு வருந்திநேரிலும், கடிதம் மூலமும் மன்னிப்புக் கோரியதால் அவர்கள் இன்று முதல்உறுப்பினர்களாக கட்சியில் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள்.

இதே போல் அதிமுகவில் இருந்து நீக்கி வைக்கப்பட்டு இருந்த கோவை மாநகர்மாவட்டம், கோவை மேற்கு பகுதி 51வது வட்டம் பா.மனோகரன், கே.நாகராஜ்,பி.ரங்கராஜ், எம்.மணி, பி.சாமுவேல், 57வது வட்டம் எஸ்கே.விஜயன் ஆகியோர்தங்களது செயலுக்கு வருந்தி மன்னிப்பு கோரியதால் மீண்டும் கட்சியில் இணைந்துபணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+