பிரதமர் உரை-பாஜக தாக்கு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

பிரதமர் மன்மோகன் சிங்கின் சுதந்திர தின உரை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளதாகபாஜக கருத்து தெரிவித்துள்ளது.

சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மன்மோகன் சிங்இன்று காலை தேசிய கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். இந்தப் பேச்சுதிருப்தி தரும் வகையில் இல்லை என்று பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ்நக்வி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், பாகிஸ்தானுக்கு பூங்கொத்து கொடுத்துவரவேற்பது போல பிரதமரின் பேச்சு அமைந்துள்ளது. தீவிரவாதிகளுக்கு ஊக்கம்கொடுத்து வளர்த்து, இந்தியாவுக்குள் நாச வேலையில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானைகடுமையான குரலில் பிரதமர் கண்டிக்காதது அதிருப்தி தருகிறது.

தீவிரவாதம், விலைவாசி உயர்வும் நாட்டை கடுமையாக பாதித்து வரும் இரண்டுபிரச்சினைகள் ஆகும். ஆனால் இவற்றிலிருந்து நாட்டு மக்களுக்கு நிவாரணம் தரும்வகையில் பிரதமரின் பேச்சு இல்லை. தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது குறித்தும்,விலைவாசி உயர்வைக் கட்டப்படுத்தவும் உறுதியான நடவடிக்கைகள், திட்டங்கள்குறித்து பிரதமரின் உரையில் எதுவும் இல்லை.

பெட்ரோலிய விலை உயர்வு குறித்தும் நாட்டு மக்களுக்கு தவறான தகவலைத்தந்துள்ளார் பிரதமர். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இதுவரை 8 முறைபெட்ரோல், டீசல் வியைை உயர்த்தி விட்டதை அவர் குறிப்பிட மறந்துவிட்டார்.

பொருளாதார உற்பத்தி மண்டலம் குறித்தும், விமான நிலையங்களைநவீனப்படுத்துவது குறித்தும் மட்டுமே பிரதமர் விரிவாக பேசியுள்ளார். ஆனால்சாதாரண ஜனங்கள்குறிதது அவர் எதையும் பேசவில்லை என்றார் நக்வி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+