இலங்கை: சிறுமிகள் பலி-கோபி அன்னான் கவலை
நியூயார்க்:
இலங்கையில், போர் அதிகரித்து வருவது கவலை தருவதாக ஐ.நா. பாதுச் செயலாளர் கோபி அன்னான்கூறியுள்ளார். உடனடியாக ராணுவம், விடுதலைப் புலிகளும் சண்டையை நிறுத்த வேண்டும் என்றும் அவர்வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கையில் ராணுவத்திற்கும், புலிகளுக்கும் இடையிலான சண்டை முற்றி வருகிறது. இதுகுறித்து அன்னான்கவலை வெளியிட்டுள்ளார். இரு தரப்பும் உடனடியாக சண்டையைக் கைவிட்டு விட்டு பேச்சு வார்த்தையைதொடர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அன்னானின் செய்தித் தொடர்பாளர் ஸ்டெபானிடு ஜர்ரிக் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர்மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என அன்னான் உறுதியாக நம்புகிறார். தற்போது நடந்துவரும் போர்,அமைதிக்கு இடையூறாக அமையும் என்று கவலை தெரிவித்துள்ள ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா, நார்வே,ஜப்பான் ஆகிய நாடுகளுடன் சேர்ந்து எனது கவலையையும் தெரிவிக்க விரும்புகிறேன்.
உடனடியாக இருதரப்பும் சண்டையை நிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். இந்தசண்டையில் பல அப்பாவி உயிர்கள் பலியாகி வருவது கவலை தருகிறது. கொழும்பு குண்டுவெடிப்பில் 7 பேர்உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். அதேபோல, வடகிழக்கில் ராணுவம் நடத்திய தாக்குதலில் பலபள்ளி மாணவிகள் பலியாகியுள்ளது அதிர்ச்சி தருகிறது.
சர்வதேச கவலைகளுக்கு இருதரப்பும் மதிப்பு அளிக்க வேண்டும். அமைதி முயற்சிகளுக்கு முக்கியத்துவம்கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் அன்னான்.












Click it and Unblock the Notifications