பொங்கல் முதல் இலவச கேஸ் இணைப்பு-ஸ்டவ்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பொங்கல் முதல் தமிழகத்தில் ஏழைக் குடும்பங்களுக்கு இலவச கேஸ் இணைப்பும், இலவச கேஸ் ஸ்டவ்களும்வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சுதந்திர தினத்தையொட்டி சென்னை புனித ஜார்ஜ கோட்டையில் கருணாநிதி தேசியக்கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.

காலை 8.20 மணிக்கு கோட்டைக்கு வந்த கருணாநிதிக்கு போலீசார் அணிவகுப்புமரியாதை அளித்தனர். பின்னர் சுதந்திர தின உரையாற்றிய கருணாநிதி பேசுகையில்,

1974ம் ஆண்டு தேசியக் கொடியை ஆகஸ்ட் 15 விடுதலை நாளில் அனைத்து மாநிலமுதல்வர்களும் ஏற்றுவதற்கான உரிமையை முதன்முதலில் பெற்றிட காரணமாகஇருந்தவன் என்ற பெருமிதத்தோடு இன்று 5வது முறையாக உங்கள் முன்னிலையில்மகிழ்ச்சி பொங்க கொடியை ஏற்றி வைத்துள்ளேன்.

கொடி ஏற்றுவது, விடுதலை நாளை கொண்டாடி மகிழ்வது மட்டுமல்ல, நமது நாட்டுகுடிமக்களின் வாழ்வு உயரவும் இந் நாளில் நாம் சூளுரை மேற்கொண்டாக வேண்டும்.

மத்திய அரசுடனும் அண்டை மாநிலங்களுடனும் இணக்கமான நல்லுறவைபேணுவதன் மூலம் தமிழகத்தின் வளர்ச்சி தடைபடாமல் செல்ல வாய்ப்புக்கள்அமையும்.

இந்த 3 மாதத்தில் 7 முறை அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி மக்கள் பிரச்சனைகளைதீர்ப்பதற்கான திட்டங்கள் மீது முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுத்துவருகிறது எனது அரசு.

முந்தைய ஆட்சி காலத்தில் வறட்சி காரணமாக உயிர் நீத்த விவசாயிகளின்குடும்பங்களுக்கு இன்று சுதந்திர திருநாளில் ரூ. 50,000 நிதியுதவி வழங்கியுள்ளோம்.

ஆட்சிக்கு வந்த 95 நாட்களுக்குள் சோனியா காந்தியையும் பிரதமர் உள்ளிட்ட மத்தியஅமைச்சர்களையும் தோழமைக் கட்சித் தலைவர்களையும் பக்கத்து மாநிலமுதல்வர்களையும் சந்தித்து தமிழக வளர்ச்சிக்காகவும்,

தாழ்த்தப்பட்டோர், பிற்படுதப்பட்டோர், சிறுபான்மையினர் மக்களின்உரிமைகளுக்காகவும் ஒத்துழைப்பையும் உதவிகளையும் கோரிள்ளோம்.

தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றிவிட்டு எஞ்சியுள்ள சிலவாக்குறுதிகளை நிறைவேற்றவும் நாட்களை குறித்து திட்டமிட்டு செயல்பட்டுவருகிறோம்.

ஏழை, எளிய மக்களின் வீடுகளில் மண்ணெண்ணெய், விறகு அடுப்புகளில் சமையல்செய்யும்போது பெண்கள் படும் இன்னல்களைக் களைய அந்தக் குடும்பங்களுக்குஇலவச எரிவாயு இணைப்பும், கேஸ் அடுப்பும் கிடைக்க வகை செய்யப்படும்.

வரும் பொங்கல் முதல் அந்தத் திட்டம் அமலுக்கு வரும். அதற்காக முதல் கட்டமாகரூ. 150 கோடி ஒதுக்கப்படும். இலவச கேஸ் இணைப்புக்கான டெபாசிட் கட்டணத்தைஅரசே வழங்கும். கேஸ் அடுப்பையும் அரசே இலவசமாக வழங்கும்.

மதுரை, திருச்சி, நெல்லை, கோவையில் சாப்ட்வேர் பூங்காங்களைஅமைக்கவுள்ளோம். மகளிர் சுய உதவிக் குழுக்கள் போல இளைஞர்ளுக்கும் உதவகுழுக்கள் உருவாக்கப்படும்.

நமது அரசின் செயல்பாடுளை இந்தியாவே கூர்ந்து கவனித்து வருகிறது. 2 ரூபாய்க்கு1 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை நாடு முழுவதும் வழங்க வேண்டும் என்றகோரிக்கை பல மாநிலங்களிலும் எழுந்துள்ளது.

இது இந்த அரசுக்கும் தமிழகத்துக்கும் கிடைத்துள்ள பெருமை என்றார் கருணாநிதி.

இந் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் தயாநிதி, பாலு, ராசா, உயர் நீதிமன்ற தலைமைநீதிபதி ஏ.பி.ஷா, அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

ஆயிரக்கணக்கான பொது மக்களும் இந்த நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.

முன்னதாக பல்வேறு அரசுத் துறைகளின் கண்கவர் வாகன அணிவகுப்பும் நடந்தது.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்துப்பகுதிகளிலும் இன்று பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ம.பொ.சி தபால் தலை:

இந் நிலையில் ம.பொ.சியின் நினைவு தபால் தலையை கருணாநிதி இன்றுவெளியிட்டார்.

மறைந்த சுதந்திரப்போராட்ட வீரரும், சட்டமேலவை முன்னாள் தலைவருமானம.பொ.சி.யின் நூற்றாண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்ட்து. அப்போதும.பொ.சிக்கு நினைவு தபால்தலை வெளியிடப்படும் என கருணாநிதி கூறியிருந்தார்.அதன்படி அவரது தபால்தலை இன்று வெளியிடப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+