கள்ளக் காதலியை எரித்து கொன்ற வாலிபர் கைது
சென்னை:
திருமணம் செய்து கொள்ளச் சொல்லி தொந்தரவு செய்த கள்ளக் காதலியை தீ வைத்துஎரித்துக் கொன்ற நபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் குமார். இவரது மனைவி செல்வமேரி.செல்வமேரிக்கு நடத்தை சரியில்லாத காரணத்தால் குமார் மனைவியை விட்டுப்பிரிந்துவிட்டார்.
கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த செல்வமேரிக்கும், தண்டையார்பேட்டையைச்சேர்ந்த அமீது என்பவருக்கும் இடையே கள்ளத் தொடர்பு ஏற்பட்டது.
அமீதுக்கு ஏற்கனவேமும்தாஜ் என்ற மனைவி உள்ளார். செல்வமேரியுடன் திருமணம்செய்து கொள்ளாமல் கள்ளக் காதலில் ஈடுபட்டிருந்தார் அமீது.
அடிக்கடி அமீதிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்ய ஆரம்பித்தார் மேரி.இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்படுமாம். மும்தாஜுக்கு மட்டும்பணம் கொடுக்கிறீர்கள். என்னையும் திருமணம் செய்து கொண்டு 2வது மனைவியாகஏற்றுக் கொள்ளுங்கள் என்று வலியுறுத்த ஆரம்பித்தார் மேரி.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்கோபமடைந்த அமீது, செல்வமேரி மீது மண்ணெண்மை ஊற்றி தீ வைத்தார்.
அப்போது செல்வமேரி, தன்னை எரித்த அமீதை கட்டிப் பிடித்துள்ளார். இதில் அமீதின்கை, கால்களிலும் தீக்காயம் ஏற்பட்டது.
பலத்த காயமடைந்த மேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.கொலை செய்த அமீதை போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications