திருச்செந்தூர்: தாய், தந்தை, மகன் தற்கொலை

Subscribe to Oneindia Tamil

திருச்செந்தூர் :

திருச்செந்தூர் முருகன் கோவில் விடுதியில் தங்கியிருந்த மதுரையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம்குடித்துத் தற்கொலை செய்து கொண்டனர்.

மதுரையைச் சேர்ந்தவர் துரைப்பாண்டியன். இவரதுமனைவி ஜெயலட்சுமி. இவர்களுக்கு பிரசாத், பிரபு என இரு மகன்கள்உள்ளனர். இவர்களில் பிரசாத் மனநிலை சரியில்லாமல் இருந்து வந்தார். பிரபு பெங்களூரில் சாப்ட்வேர் என்ஜீனியராக வேலைபார்த்து வருகிறார்.

துரைப்பாண்டியன், ஜெயட்சுமி, பிரசாத் ஆகிய 3 பேரும் திருச்செந்தூர் வந்தனர். அங்கு முருகன் கோவில் வளாகத்தில் உள்ளவிடுதியில் தங்கினர். சாமி கும்பிட கோவிலுக்குச் சென்ற 3 பேரும் இரவு அறைக்கு வந்து தங்கினர். காலையில் இவர்களதுஅறைக் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது.

போலீஸார் விரைந்து வந்து கதவை உடைத்துத் திறந்தனர். உள்ளே சென்று பார்த்த போது துரைப்பாண்டி, ஜெயலட்சுமி, பிரசாத்ஆகிய 3 பேரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலைசெய்து கொண்டது தெரியவந்தது.

தற்கொலைக்கு முன்பு துரைப்பாண்டியன் கடிதம் எழுதி வைத்திருந்தார். அதில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. வாங்கியகடனைக்கட்ட முடியவிலலை. இதனால் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொள்கிறோம் என்று எழுதியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+