கிருஷ்ணர் கோவிலில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

இம்பால்:

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் நடந்த கிருஷ்ணர் ஜெயந்தி விழாவின்போது பயங்கர குண்டுவெடித்தது. இதில் 5 பக்தர்கள் பலியானார்கள்.

நேற்று கிருஷ்ணர் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அனைத்து கிருஷ்ணர் கோவில்களிலும் விசேஷ பூஜைகள்,உரியடி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடந்தன.

இம்பால் நகரில் இஸ்கான் அமைப்பின் ஹரே கிருஷ்ணா கோவில் உள்ளது. இங்கு நேற்று முழுவதும் ஏராளமான பக்தர்கள்வழிபட்டவண்ணம் இருந்தனர். இரவு 7 மணியளவில் கோவிலில் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 5 பேர்பலியானார்கள்.

50 பேர் காயமடைந்தனர். இவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த 5 பேரும், பிரான்ஸைச் சேர்ந்த 3 பேரும் அடங்குவர்.

குண்டு வெடிப்புக்கு எந்தத் தீவிரவாத அமைப்பு காரணம் என்பது தெரியவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+