கிருஷ்ணர் கோவிலில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
இம்பால்:
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் நடந்த கிருஷ்ணர் ஜெயந்தி விழாவின்போது பயங்கர குண்டுவெடித்தது. இதில் 5 பக்தர்கள் பலியானார்கள்.
நேற்று கிருஷ்ணர் ஜெயந்தி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அனைத்து கிருஷ்ணர் கோவில்களிலும் விசேஷ பூஜைகள்,உரியடி நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடந்தன.இம்பால் நகரில் இஸ்கான் அமைப்பின் ஹரே கிருஷ்ணா கோவில் உள்ளது. இங்கு நேற்று முழுவதும் ஏராளமான பக்தர்கள்வழிபட்டவண்ணம் இருந்தனர். இரவு 7 மணியளவில் கோவிலில் பயங்கர சப்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 5 பேர்பலியானார்கள்.
50 பேர் காயமடைந்தனர். இவர்களில் அமெரிக்காவைச் சேர்ந்த 5 பேரும், பிரான்ஸைச் சேர்ந்த 3 பேரும் அடங்குவர்.
குண்டு வெடிப்புக்கு எந்தத் தீவிரவாத அமைப்பு காரணம் என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications