திருத்தணி முருகனுக்கு ஏழுமலையானின் சீர் வரிசை
Subscribe to Oneindia Tamil
திருப்பதி:
திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில் இருந்து திருத்தணி சுப்பிரமணிய சுவாமிக்கு பட்டு வஸ்திரம், மலர்மாலைகள் உள்ளிட்ட சீர் வரிசைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி கோவிலில் தெப்ப உற்சவ விழா நாட்கள் நடைபெறுகிறது.இதையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் திருமலையில் இருந்து திருத்தணிக்கு சீர்வழங்கப்படுவது மரபு.
இந்த ஆண்டும் திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரிகள் நேரில் வந்து திருத்தணி ஆலய நிர்வாகிகளிடம் சீர்வரிசைகளை வழங்கினர்.
இந்த பட்டு வஸ்திரங்கள், மாலைகள் சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சாற்றப்படும்.












Click it and Unblock the Notifications