நள்ளிரவு.. நடுக்காடு.. நின்று போன ரயில்
Subscribe to Oneindia Tamil
கோவை:
நீலகிரி எக்ஸ்பிரஸின் இன்ஜின் பழுதாடைந்ததால் நள்ளிரவில் நடுக்காட்டில் ரயில்நின்றது. இதனால் பல மணி நேரம் பயணிகள் அச்சத்துடன் தவித்தனர்.
சென்னை-மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில், நேற்றிரவு சென்னையில்இருந்து புறப்பட்டது. நள்ளிரவு 1 மணியளவில் ஜோலார்பேட்டை-சேலம் இடையேசாம்பல்பட்டி என்ற இடத்தில் ரயில் வந்தபோது இன்ஜினில் திடீரென கோளாறுஏற்பட்டது.இதையடுத்து அங்கேயே ரயில் நிறுத்தப்பட்டது. நள்ளிரவில் ரயில் நின்றதால்பயணிகள் பதறிப் போனார்கள். ரயில் நின்ற இடம் காட்டுப் பகுதி என்பதால்பயணிகள் தவியாய் தவித்தனர்.
இன்ஜின் கோளாறு சரி செய்யப்பட்டு அதிகாலை 5.10 மணிக்குத் தான் மீண்டும் ரயில்புறப்பட்டது. இதனால் அதிகாலை 5 மணிக்கு கோவை வரவேண்டிய ரயில். 4 மணிநேரம் தாமதமாக காலை 9 மணிக்கு வந்து சேர்ந்தது.
நீலகிரி எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டதால், அந்த வழியே செல்ல வேண்டியசென்னை-கோவை சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலும் வழியில் நிறுத்தப்பட்டு 4 மணி நேரம்தாமதமாக காலை 10 மணிக்கு கோவை வந்தது. அந்த வழியாக சென்ற எல்லாரயில்களும் பல மணி நேரம் தாமதமாக சென்றன.












Click it and Unblock the Notifications