இந்தியா: 15-29 வயதில் 33% எய்ட்ஸ் நோயாளிகள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
இந்தியாவில் உள்ள எய்ட்ஸ் நோயாளிகளில் 33 சதவீதம் பேர் 15 வயது முதல் 29வயதுக்கு உட்பட்டவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பனபாகலட்சுமி கூறியுள்ளார்.
ராஜ்யசபாவில் அவர் பேசுகையில்,எய்ட்ஸ் குறிதத விழிப்புணர்ச்சியை சிவப்பு ரிப்பன் எக்ஸ்பிரஸ் திட்டம் மூலம்உருவாக்க ரயில்வே துறையும், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக் கழகமும் கூட்டுஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளன.
இத்திட்டம் விரைவில் இறுதி செய்யப்படும். அதன் பின்னர் பத்திரிக்கைகள்,தொலைக்காட்சிகள் மூலம் தீவிர எய்ட்ஸ் விழிப்புணர்வு பிரசாரம்மேற்கொள்ளப்படும்.
கடந்த 2 ஆண்டுகளில் உ.பி.யில்தான் அதிக அளவிலான எய்ட்ஸ் நோயாளிகள்உருவாகியுள்ளனர். இதற்கு அடுத்த ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் உள்ளனஎன்றார் லட்சுமி.












Click it and Unblock the Notifications