விவசாயிகளுக்காக போராட்டம்: விபி சிங் கைது

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

உ.பி. மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அரசு தாரைவார்த்த நிலத்தில் விவசாயிகளுடன் சேர்ந்து ஏர் பூட்டி உழும் போராட்டம் நடத்தச்சென்ற முன்னாள் பிரதமர் வி.பி.சிங் உள்ளிட்ட 2,000க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டனர்.

VP Singh

உபி முதல்வர் முலாயம் சிங் யாதவ்-அவரது வலது கை அமர் சிங்- ரிலையன்ஸ்அம்பானிகள் இடையிலான தொடர்பு உலகறிந்தது.

இந் நிலையில் காஸியாபாத் மாவட்டத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் தத்ரி மின்சாரத்திட்டத்திற்காக ஏக்கர் கணக்கிலான விவசாய நிலத்தை அம் மாநில அரசு தாரைவார்த்துள்ளது.

இதற்கு வி.பி. சிங் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆயிரக்கணக்கானவிவசாயிகளுடன் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலத்தை உழும்போராட்டத்தில் விபி சிங் ஈடுபட முயன்றார்.

வி.பி.சிங், ஜன் மோர்ச்சா தலைவர் நடிகர் ராஜ்பப்பர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானவிவசாயிகள் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலம் உள்ள பஜேத்ரா குர்த்கிராமத்தை நோக்கி கிளம்பினர்.

ஆனால் வழியிலேயே போலீஸார் அவர்களை மடக்கினர். அனைவரையும் கைதுசெய்த போலீஸார் சிங்கை, விருந்தினர் இல்லத்திற்கும், மற்ற தலைவர்களைபில்குவான் காவல் நிலையத்திற்கும் கொண்டு சென்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+