சுனாமி மாணவிக்கு எம்.பி.பி.எஸ். சீட்: அன்புமணி உதவி
கடலூர்:
சுனாமிக்கு தனது தாயைப் பறிகொடுத்த கடலூர் மாணவியின் கனவை நினவாக்கும்வகையில், அவருக்கு மருத்துவக் கல்லூரியில் சீட் ஒதுக்கிக் கொடுத்து உதவியுள்ளார்மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ்.
கடந்த 2004ம் ஆண்டு வீசிய சுனாமி ஆழிப் பேரலையில் சிக்கி தனது தாய்மலர்க்கொடியைப் பறிகொடுத்தவர் கடலூர் மாவட்டம் வெளிங்கராயன் பேட்டைகிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி.சுனாமி பாதித்த பகுதிகளை முன்பு அமைச்சர் அன்புமணி சுற்றிப் பார்த்தார். அப்போதுசெந்தமிழ்ச்செல்வி, தான் டாக்டருக்குப் படிக்கும் லட்சியத்துடன் உள்ளதாகவும்,அதற்கு அமைச்சர் உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார். அப்போதுசெல்வி பிளஸ் ஒன் படித்துக் கெண்டிருந்தார்.
நிச்சயம் உனது கனவு நினவாகும் என்று அன்புமணி உறுதியளித்திருந்தார்.சொன்னபடி இப்போத செந்தமிழ்ச்செல்வியின் கனவை நினவாக்க உதவியுள்ளார்அன்புமணி. செல்விக்கு மத்திய அரசு ஒதுக்கீட்டின் கீழ் திருவனந்தபுரம் மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சீட் கொடுத்துள்ளார் அன்புமணி.
இதனால் செந்தமிழ்ச் செல்வி சந்தோஷமடைந்துள்ளார். அமைச்சருக்கு நன்றிதெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications