ஈழத் தமிழர் பிரச்சனை: கருணாநிதி உருக்கம்!
சென்னை:
செல்போனில் தொடர்ந்து செக்ஸ் தொல்லை கொடுத்த வாலிபரை தொல்லைக்குஆளான பெண், அவரது கணவர் உளளிட்ட 4 பேர் சேர்ந்த கழுத்தை நெரித்துக்கொலை செய்தனர்.
சென்னை திரு.வி.க.நகரைச் சேர்ந்தவர் ஆதில். இவர் தனது அண்ணன் நடத்தி வந்தசெல்போன் கடையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 6ம் தேதி முதல் ஆதிலைக்காணவில்லை. இதையடுத்து ஆதிலின் தாயார் போலீஸில் புகார் செய்தார்.போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆதில் வைத்திருக்கும்செல்போன் நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு ஆதிலின் செல்போனிலிருந்துபண்ணப்பட்ட, பெறப்பட்ட கால்கள் குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது ஜனார்த்தனம் என்பவரின் எண்ணுக்கு அதிக அளவில் எஸ்.எம்.எஸ்.களும்,அழைப்புகளும் போயிருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் ஜனார்த்தனம் வீட்டுக்கு விரைந்தனர். அவரிடம் ஆதில்குறித்து விசாரித்தனர்.
அப்போது ஜனார்த்தனம், அவரது மனைவி தனலட்சுமி, ஜனார்த்தனத்தின்நண்பர்களான செந்தில், துரை ஆகியோர் சேர்ந்துதான் ஆதிலைக் கொலை செய்ததுதெரிய வந்தது.
ஆதில் வீட்டுக்கு அருகே தான்முன்பு கல்யாணத்திற்கு முன்னதாக தனலட்சுமி வசித்துவந்தார்.
அப்போது தனலட்சுமியை ஆதில் விரும்பியுள்ளார். ஆனால் தனது காதலைதனலட்சுமியிடம் தெரிவிக்காமல் இருந்து விட்டார். இந்த நிலையில் தனலட்சுமிக்குதிருமணம் நிச்சயமானது. இதை அறிந்த ஆதில் அதிர்ச்சி அடைந்தார்.
ஆனால் நிலைமை கைமீறி போய் விட்டதால் மனதுக்குள்ளேயே குமைந்துள்ளார்.தனலட்சுமி திருமணம்முடிந்த பின்னர் நண்பர் என்றமுறையில் அடிக்கடிதனலட்சுமியின் வீட்டுக்குப் போய் வருவாராம்.
அப்போது ஜனார்த்தனத்தின் செல்போன் எண்ணை வாங்கியுள்ளார்.
ஜனார்த்தனம் பகலில் தனது செல்போனை வீட்டிலேயே வைத்து விட்டுப்போய்விடுவது வழக்கமாம். இதை அறிந்த ஆதில், தினசரி அந்த செல்போனுக்குஆபாச எஸ்.எம்.எஸ்.களை அனுப்பியுளளார்.
மேலும், ஆபாசமாகவும் பேசியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்தார் தனலட்சுமி.இனிமேல் இப்படி நடக்க வேண்டாம் என்று ஆதிலை அவர் எச்சரித்துள்ளார்.
ஆனால் ஆதில் தனது சேட்டையைத் தொடர்ந்துள்ளார். இதையடுத்து அவரைத்தீர்த்துக் கட்டமுடிவு செய்தனர் ஜனார்த்தனம், தனலட்சுமியும். தங்களது வீட்டுக்குவிருந்து சாப்பிட வருமாறு அவர்கள் ஆதிலைக் கூப்பிட்டனர்.
இதையடுத்து ஆதிலும் கிளம்பி தனலட்சுமி வீட்டுக்கு வந்துள்ளார்.
வீட்டுக்கு வந்த ஆதிலை தனலட்சுமி, ஜனார்த்தனம், செந்தில், துரை ஆகியோர்கழுத்தை நெரித்துக்கொலை செய்தனர். பின்னர் அவரது உடலையும், மோட்டார்சைக்கிளையும் பள்ளிக்கரணைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு சாலையில் உடலையும், பைககையும் போட்டு விட்டு கார் மூலம் ஆதில்கழுத்தில் ஏற்றி விபத்து போல செட்டப் செய்தனர்.
இதை பள்ளிக்கரணை போலீஸாரும் நம்பி, சாலை விபத்து என வழக்குப் பதிவுசெய்தனர்.
இந்த நிலையில் ஆதிலின் தாயார் கொடுத்த புகாரின் மீது போலீஸார் நடத்தியவிசாரணையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்ட நான்குபேர் மீதும் கொலை வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications