For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்புமணி எம்.பி பதவிக்கு ஆபத்து அதிகரிப்பு!

By Staff
Google Oneindia Tamil News

வாரணாசி:

மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வகித்து வரும் டெல்லி மருத்துவவிஞ்ஞான கழக தவைலர் பதவி, ஆதாயம் பெறும் பதவி பட்டியலில் தொடர்ந்துநீடிப்பதாக தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமி கூறியுள்ளார். இதனால்அன்புமணியின் எம்.பி பதவிக்கு ஆபத்து அதிகரித்துள்ளது.

மத்திய அமைச்சர் அன்புமணி, அகில இந்திய மருததுவ விஞ்ஞானக் கழகத்தின்தலைவராக உள்ளார். அன்புமணி ஆதாயம தரும் பதவியில் உள்ளார். எனவேஅவரது எம்.பி பதவியை பறிக்க வேண்டும் என்று கோரி விஞ்ஞானக் கழக இயக்குநர்வேணுகோபால் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக அன்புமணிக்கு நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது.இந்த நிலையில், அன்புமணி வகித்து வரும் தலைவர் பதவி இன்னும் ஆதாயம் தரும்பதவிப் பட்டியலில் தான் உள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் கோபாலசாமிகூறியுள்ளார்.

வாரணாசியில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், அமைச்சர் அன்புமணியின்பதவியைப் பறிக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

ஆதாயம் பெறும் பதவி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துவிட்டார். எனவே இது தொடர்பான புகார்களை அந்த சட்ட மசோதாவின்அடிப்படையில் தான் நாங்கள் விசாரிப்போம். டாக்டர் அன்புமணி ராமதாஸ் வகிக்கும்விஞ்ஞானக் கழக தலைவர் பதவிக்கு, இரட்டைப் பதவி மசோதாவில் விலக்குஅளிக்கப்படவில்லை.

மேலும் 40 எம்.பிக்களின் பதவியைப் பறிக்க கோரும் புகார்களையும் இந்த புதியமசோதாவின் அடிப்படையில்தான் விசாரிப்போம். ஆதாயம் தரும் பதவி எவைஎன்பதைக் கண்டறிய நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்க நாடாளுமன்றத்தில்ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அந்தப் பதவிகள் கண்டறியப்பட்டு புதிய பட்டியல் தயாரிக்கப்படும்என்றார் கோபாலசாமி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X