என் மகன் மீதான கற்பழிப்பு வழக்கு பொய்யானது: பர்னாலா
Subscribe to Oneindia Tamil
சண்டிகர்:
என் மகன் மீது போடப்பட்டுள்ள கற்பழிப்பு வழக்கு பொய்யானது என்று தமிழக ஆளுநர் பர்னாலாகூறியுளளார்.
பர்னாலாவின் மகனும், பஞசாப் அகாலிதள கட்சி எம்.எல்.ஏவுமான ககன்ஜித்சிங் மீது வேலைக்காரப் பெண்ணைகற்பழித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிங்கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் சண்டிகர் வந்த பர்னாலாவிடம் இந்த வழக்கு குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர்பதிலளிக்கையில், இது பொய்யான வழக்கு. இதற்கு மேல் இது குறித்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.
இது பொய்யான வழக்கு என்று எல்லோருக்குமே தெரியும். ஒரு தந்தை என்றமுறையில் இந்தவழக்கு குறித்துநான் மிகவும் வேதனை அடைந்தேன். எல்லா தந்தைகளுக்குமே தங்கள் மகன் பற்றி இப்படி செய்தி வந்தால்வேதனை வரத்தான் செய்யும்.
பஞ்சாப் ஆளுநரை சந்தித்து வழக்கு தொடர்பாக சில விவரங்களை தெரிவித்தேன். விசாரணை நியாயமாகநடைபெறும் என அவர் உறுதியளித்துள்ளார் என்றார் பர்னாலா.












Click it and Unblock the Notifications