மும்பையில் பாக் ஆதரவு தீவிரவாதி சுட்டு கொலை
மும்பை:
மும்பையில் இன்று காலை பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதி ஒருவனைபோலீஸார் சுட்டுக் கொன்றனர். ஒருவன் பிடிபட்டான். அவனிடமிருந்து 2.5 கிலோஆர்.டி.எக்ஸ் வெடிபொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக மும்பையில் மிகப் பெரிய நாச வேலையைமேற்கொள்ள தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக உளவுத் துறைக்கு தகவல்வந்துள்ளது. இதையடுத்து சுதந்திர தினம் முதல் மும்பையில் பாதுகாப்பு பன்மடங்குஅதிகரிக்கப்பட்டது.துணை ராணுவத்தினர், போலீஸார் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்னர். இந்நிலையில் இன்று அதிகாலை சந்தேகத்திற்கு இடமான வகையில் திரிந்த 2 பேரைபோலீஸார் சுற்றி வளைத்தனர். இதையடுத்து இருவரும் போலீஸாரை தாக்கிவிட்டுதப்ப முயன்றனர்.
இதைத் தொடர்ந்து போலீஸார் அவர்கள் இருவரையும் சுட்டனர். இதில் ஒருவன்இறந்தான். இன்னொருவன்பிடிபட்டான். அவனிடமிருந்து 2.5 கிலோ ஆர்.டி.எக்ஸ்.வெடிபொருள், ஒரு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளாக இருக்கலாம் என போலீஸார்சந்தேகிக்கின்றனர். பிடிபட்டவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவத்தைத் தொடர்ந்து மும்பைமுழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications