வெடிகுண்டு பீதி-ரயிலிலிருந்து தப்பியோடிய பயணிகள்
சென்னை:
சென்னை சென்ட்ரல் நிலையத்தில், நின்றிருந்த ஏலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில்வெடிகுண்டு இருப்பதாக பரவிய வதந்தியையடுத்து அதில் அமர்ந்திருந்த பயணிகள்வெளியே குதித்து ஓடினர். இதனால் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் செல்லும் ஏலகிரிஎக்ஸ்பிரஸ் ரயில், மாலை 5.30மணிக்கு புறப்பட தயாராக இருந்தது. பயணிகள்கூட்டம் நிரம்பி வழிந்தது. இந் நிலையில் எஸ்8 பெட்டியில் இருந்து இறங்கியபாண்டியன் என்ற பயணி ரயிலில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறினார்.இதைக் கேட்ட பயணிகள் அனைத்துப் பெட்டிகளிலிருந்தும் அவசர அவசரமாகஇறங்கி ஓடினர். போட்டி போட்டுக் கொண்டு இறங்கியதால் பலர் கீழே விழுந்துகாயமடைந்தனர். ஒருவர் மீது ஒருவர் ஏறி ஓடியதில் மேலும் பலர் காயமடைந்தனர்.
பலர் தங்களது குழந்தைகளை தூக்கி கீழே போட்டனர். வயதானவர்கள் இறங்கமுடியாமல் அவதிப்படடனர். பயணிகள் பதட்டம் குறித்து தகவல் அறிந்த ரயில்வேபோலீஸார் அங்கு விரைந்து வந்தனர். மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டுநிபுணர்களுடன் எஸ் 8 பெட்டியை சோதனையிட்டனர்.
ஆனால் குண்டு ஏதும் இல்லை. அதே நேரத்தல் ஆனால் பெட்டிக்கு அருகே இருந்தட்யூப் லைட் சோக்கிலிருந்து சத்தம் வந்தது. இதைத்தான வெடிகுண்டு சப்தம் எனபயணி பாண்டியன் நினைத்து புரளி கிளப்பிவிட்டார்.
இதையடுத்து ரயிலில் வெடிகுண்டு இல்லை, பயணிகள் ரயிலில் ஏறவும் என ரயில்வேபோலீஸார் மைக் மூலம் கோரிக்கை விடுத்தனர். அதன் பின்னர் மிக சொற்பபயணிகளே மீண்டும் அந்த ரயிலில் ஏறினர். இந்த களேபரம் காரணமாக முக்கால்மணிநேரம் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.












Click it and Unblock the Notifications