கருணாநிதி வீட்டுக்கு கரண்ட்: இழுத்தடித்தஅதிமுக அரசு - ஆற்காடு வீராசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் கருணாநிதியின வீட்டிற்கு மின் இணைப்புதராமல் 7 மாதங்களுக்கு அதிமுக அரசு இழுத்தடிப்பு செய்தது என்று மின்துறைஅமைச்சர்ஆற்காடு வீராசாமி சட்டசபையில் குற்றம் சாட்டினார்.
சட்டசபையில் ஆற்காடு வீராசாமி பேசுகையில், கடந்த அதிமுக ஆட்சியில் திமுகதலைவர் கருணாநிதியின் புதிய வீட்டுக்கு மின் இணைப்பு கொடுப்பதில் நீண்டதாமதம் செய்தார்கள்.கிட்டத்தட்ட 7 மாதங்கள் இழுத்தடித்த பின்னரே அனுமதி தரப்பட்டது. ஆனால்தற்போதைய திமுக ஆட்சியில் மின் இணைப்பு கேட்ட 24 மணி நேரத்திற்குள்இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அப்படி செய்யாத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதேபோலஅலமாத்தி துணை மின் நிலையத்தை நிர்மாணிப்பதிலும் அதிமுக அரசு அக்கறைகாட்டவில்லை. நாங்கள் வந்த பிறகுதான் அதை முடித்து திறந்துள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications